ஆப்நகரம்

தாம்பரம் நகைக்கடை கொள்ளை: அசாம் சிறுவர்கள் துணிகரம்..! பின்னணி

சென்னை தாம்பரம் அடுத்த கவுரிவாக்கத்தில் நகைக்கடையில் கொள்ளை வழக்கு குறித்து தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் செய்தியாளர்கள் சந்திப்பு

Samayam Tamil 26 Nov 2022, 7:26 pm
சென்னை தாம்பரம் அடுத்த கவுரிவாக்கத்தில் நகைக்கடையில் கொள்ளை வழக்கு குறித்து தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் அவர் கூறியதாவது, இந்த கொள்ளை வழக்கில் 3 சிறுவர்கள் கைதாகி உள்ளனர். அசாமில் இருந்து வேலைக்காக வந்தவர்கள். பெட்டி கடை ஒன்றில் வேலை செய்து வந்தனர்.
Samayam Tamil tambaram robbery case
bluestone robbery case


ப்ளுஸ்டோன் நகை கடையின் மேல் மாடியில் இருந்த லிப்ட் ஆப்ரேட் செய்யும் இடத்தின் துவாரம் வழியாக ஒரு சிறுவன் உள்ளே சென்றுள்ளான். சிசிடிவி மூலம் தெரிய வந்தது.

விரைவாக கண்டுபிடித்து கைது செய்துள்ளது சேலையூர் காவல் உதவி ஆணையர் தனிப்படை. சுமார் ரூ. 1.5 கோடி மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. ஆனால், அங்கு ரூ. 3 கோடிக்கு மேல் தங்க நகைகள் இருந்தது. பெரும்பாலான தங்க நகைகள் தப்பியது. பார்வைக்கு வைக்கப்பட்ட தங்க நகைகள் மட்டுமே கொள்ளை போனது.

கடந்த ஜூன் மாதம் தான் இந்த கடை புதிதாக திறக்கப்பட்டுள்ளது. அலாரம் வைக்கப்பட்டுள்ளது. அந்த அலராம் கடையின் மேலாளருக்கே கேட்டுள்ளது. ஆனால், அவர் உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்கவில்லை.

முடிந்து போன வழக்குக்கு 10 லட்சம் லஞ்சம்... இன்ஸ்பெக்டர் மீது பரபரப்பு புகார்..!

கடைக்கு நேரில் வந்து பார்த்த பிறகே காவல்துறைக்கு தெரிவித்துள்ளனர். அலர்ட் கிடைத்தது காலை 4.30 மணி. ஆனால், 6 மணிக்கு தான் போலீசுக்கு சொன்னார்கள். உடனடியாக போலீஸ் செயல்பட்டு கொள்ளையர்களை கைது செய்துள்ளோம்.

கொள்ளையர்களின் பின்னணி குறித்து தீவிர விசாரணை சென்று கொண்டிருக்கிறது என இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த செய்தி