ஆப்நகரம்

திருமணத்தை மீறிய உறவு: உதவச் சென்ற மூன்று போலி காவலர்கள்!

தோழியின் திருமணத்தை மீறிய உறவுக்கு உதவுவதற்காக போலீஸ் வேடத்தில் வந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

Samayam Tamil 7 Dec 2019, 6:59 am
சென்னை மாம்பலம் ரயில் நிலையத்தில் வேலை பார்க்கும் வதணிக்கு திருமணமான நிலையில் தன்னுடன் பணிபுரியும் கிஷோர் என்பவருடன் திருமணத்துக்கு மீறிய உறவு இருந்தது. இந்நிலையில் கிஷோர் தன்னுடன் பணிபுரியும் சுபாஷினி என்ற பெண்ணுடனும் பழகிவந்துள்ளார்.
Samayam Tamil திருமணத்தை மீறிய உறவு உதவச் சென்ற மூன்று போலி காவலர்கள்


ஆன்லைன் டெலிவரி: செல்போன்களை அபேஸ் செய்த நண்பர்கள்!

கிஷோர் - சுபாஷினி பழகிவருவதை அறிந்த வதணி இதைத் தடுக்க தனது தோழி முத்துலட்சுமியுடன் திட்டம் தீட்டியுள்ளார். ஆவடியில் அழகுநிலையம் வைத்திருக்கும் முத்துலட்சுமி தோழி வதணிக்கு உதவி செய்ய முன்வந்துள்ளார். அந்தவகையில் முத்துலட்சுமி காவல்துறை அதிகாரி போல வேடமிட்டு தன்னுடன் இன்னும் இரண்டு பெண்களை காவலர்கள் உடுப்பில் அழைத்துக்கொண்டு வாடகை காரில் மாம்பலம் ரயில் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை காலை வந்துள்ளார்.

தெலங்கானா என்கவுண்டர் நடந்த கதை!

அப்போது பணிக்கு வந்த சுபாஷினியை காவலர்கள் விசாரிக்குமாறு அழைத்து காரில் ஏறச் சொல்லியிருக்கின்றனர். அப்போது சுபாஷினி வரமறுத்து கூச்சலிட்டதுடன் கூட்டம் கூடியது. இந்நிலையில் சுபாஷினியை விட்டுவிட்டு முத்துலட்சுமி உட்பட மூன்று போலி காவலர்களும் தப்பிவிட்டனர்.

ஆனால் அங்கு மாட்டிக்கொண்ட வாடகைக் கார் ஓட்டுநர் ஜீவானந்தம் தனக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று கூறியுள்ளார். மேலும் அவர்கள் நிஜ போலீஸ் என்று நம்பியே வந்ததாக கூறியுள்ளார்.

என்கவுண்டர்: என் மகள் ஆத்மா சாந்தியடையும் - பெண் மருத்துவர் தந்தை உருக்கம், நிர்பயா தாய் மகிழ்ச்சி!

பின்னர் தேடுதல் வேட்டை நடத்தி காவல்துறையினர் மூன்று போலி காவலர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அடுத்த செய்தி