ஆப்நகரம்

கடப்பா: சற்றுமுன் கோர விபத்து..! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பலி

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Samayam Tamil 6 Mar 2020, 1:58 pm
ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம் ஒபுலவாரி பள்ளி அருகே லாரி, கார் எதிரெதிரே மோதிய விபத்தில் காரில் பயணித்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததையடுத்து பள்ளம் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Samayam Tamil கடப்பா அருகே கோர விபத்து 3 பேர் பலி


கடப்பா மாவட்டம், புல்லாம்பேட்டை சென்னகாரி பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பாப்பையா (42). இவர் குவைத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இவர் இன்று அதிகாலை சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

பின்னர் அங்கிருந்து காரில் தன்னுடைய தாய் சுப்பம்மா மற்றும் மகன் ஹரிச்சரண் உடன் பாப்பையா தனது கிராமத்திற்கு வந்துகொண்டிருந்தார். இந்நிலையில் சின்ன ஓரம் பாடு கிராமம் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர்நோக்கி வந்த டேங்கர் லாரி மீது கார் வேகமாக மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த பள்ளம் பேட்டை காவல் நிலைய போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூர் விபத்து: 12 பேர் பலி - கோயிலுக்குச் சென்றபோது நடந்த கொடூரம்!

இந்த கோர விபத்தையடுத்து அப்பகுதியில் ஏரளாமானோர் குவிந்ததால் ஓரம் பாடு சாலை சில மணி நேரத்துக்கு முடங்கியது. வெளியூரில் வேலை பார்த்து வந்த கணவன் வீட்டுக்கு வரும் முன்னரே சடலமாக இருந்ததை பார்த்து பாப்பையாவின் மனைவி கதறி அழுத சம்பவம் அங்கிருந்தோரை சோகத்தில் ஆழ்த்தியது.

அடுத்த செய்தி