ஆப்நகரம்

ஒட்டன்சத்திரம் அருகே கோர விபத்து: பெண் உட்பட மூவர் சம்பவ இடத்திலேயே பலி..!

ஒட்டன்சத்திரம் அருகே பூ ஏற்றிச் சென்ற மினி வேன் மோதிய விபத்தில் இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த பெண் உட்பட மூவர் பலி

Samayam Tamil 20 May 2022, 5:24 pm
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தங்கச்சியம்மாபட்டி வாய்க்கால் பாலம் அருகே நிலக்கோட்டையில் இருந்து பூக்கள் ஏற்றிக்கொண்டு கோவை நோக்கி மினிவேன் வந்தது.
Samayam Tamil accident news


அப்போது, சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது மோதி விபத்திற்குள்ளாகி நிலைதடுமாறி சாலையின் எதிரே சென்று எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மீது மோதி கோர விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தால் இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த பெண் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தெலுங்கானாவில் நடத்தப்பட்டது போலி என்கவுண்டர்... பெண் மருத்துவர் வழக்கில் பகீர்..!

உயிரிழந்தவர்களில் கள்ளிமந்தயம் ஒத்தையூரைச் சேர்ந்த கருப்புச்சாமி மற்றும் ஒட்டன்சத்திரம் ஹவுசிங்போர்டைச் சேர்ந்த சந்திரன் மற்றும் அவரது மனைவி சந்திரகலா ஆகிய மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து அம்பிளிக்கை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி