ஆப்நகரம்

மனிதன் பட பாணியில் சோகம்... பிளாட்பாரத்தில் கார் ஏறி 3 பேர் பலி..! திருச்சி பரபரப்பு

இரவில் சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது கார் எறியதில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Samayam Tamil 12 Mar 2023, 2:36 pm
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில் நேற்றிரவு சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தறிகெட்டு ஓடியது. ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் சாலையோரம் பிளாட்பாரத்தில் தூங்கிய யாசகர்கள் மீது ஏறி இறங்கியது. இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். காயமடைந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
Samayam Tamil trichy accident


மேலும் இதில் அரசு மருத்துவமனையில் மேலும் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்த திருச்சி மாநகர வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்து உடல்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கைதானவர்கள்


போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் தாறுமாறாக காரை ஓட்டியதால் இந்த விபரீதம் நடந்து இருப்பது தெரிய வந்தது - கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய திருச்சி மார்கெட் பகுதியை சேர்ந்த லட்சுமி நாராயணன் (23), அஸ்வந்த் (21) ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தாறுமாறாக காரை இயக்கிய இளைஞர்கள் மது போதையில் இருந்தார்களா? அல்லது காரை வேகமாக இயக்கியது தான் இந்த விபத்துக்கு காரணமா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. முதற்கட்ட விசாரணையில் காரின் டயர் வெடித்ததில் இந்த விபத்து ஏற்பட்டதாக போலீசார் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

'இந்திக்காரர்கள்'... 'தெலுங்கு வந்தேறிகள்'... சீமான் மீது வழக்கு பாய்ந்தது..!

ஸ்ரீரங்கம் மற்றும் ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறையில் நூற்றுக்கணக்கான யாசகர்கள் பிச்சை எடுப்பதோடு பிளாட்பாரத்தில் தங்கி வருகின்றனர். இரவு நேரத்தில் தாறுமாறாக காரை இயக்கி இத்தகைய விபத்தை ஏற்படுத்தியவர்கள் பினையில் வெளியே வராதபடி காவல்துறையின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த செய்தி