ஆப்நகரம்

குளிக்கச் சென்ற சிறுமிக்கு கொடுமை, ஜெயிலுக்கு சென்று திரும்பியவர்கள் அட்டூழியம்..!

மயிலை அருகே பெண்ணின் வீட்டை தீயிட்டு கொளுத்திய பிணையில் வெளிவந்த குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை

Samayam Tamil 19 Apr 2021, 10:22 pm
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் காவல் சரகத்திற்கு உட்பட்ட குளிச்சாறு பகுதியில் 3 மாதத்திற்கு முன்பு ஆற்றங்கரைக்கு குளிக்கச் சென்ற பெண்ணிடம் தகாத முறையில் ஈடுபட்ட விமல் , கலைவாணன் , சாலமன் ஆகிய மூவர் மீது பாதிக்கப்பட்ட பெண் வீட்டார் புகார் அளித்தனர்.
Samayam Tamil file pic


பின்னர் போலீசார் அவர்களை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்நிலையில் பிணையில் வெளிவந்த மூன்று குற்றவாளிகளும் சம்பந்தப்பட்ட பெண்ணின் வீட்டிற்குச் சென்று தகராறில் ஈடுபட்டனர். மேலும், பெண் வீட்டார் சமாதானம் செய்ய முற்படவே மூன்று பேரும் அந்தப் பெண்ணின் வீட்டை தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அங்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படாததை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாசிடம் நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் காளிதாஸ் தலைமையில் மனுவை அளித்தனர்.

சிறுமிக்கு வீடியோ கால், நள்ளிரவு சேட்டிங்... நடிகர் டேனி மீது பரபரப்பு புகார்..!

மேலும் இச்சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

அடுத்த செய்தி