ஆப்நகரம்

சிறுமி உட்பட மூன்று பெண்கள் கிணற்றில் சடலமாக மீட்பு.. தற்கொலையா? கடலூர் பரபர

கடலூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்கள் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 1 Dec 2022, 3:20 pm
கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த மலையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுருநாதன் (39). இவர் சுமதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில், சிவகுருநாதன் வேலை சென்னை போரூரில் தங்கி வேலை பார்த்து வந்தபோது வீட்டு உரிமையாளரான மிஸ்பா சாந்தியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் நெருக்கமாக இருந்து வந்துள்ளனர். அதனால் மிஸ்பா சாந்தி கர்ப்பமாகி பெண் குழந்தையும் பிறந்துள்ளது.
Samayam Tamil cuddalore


இந்த விவகாரம் சுமதிக்கு தெரிவந்ததும் கணவன், மனைவிக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் காதல் கணவனின் கள்ளக்காதல் விவகாரத்தால் மன உளைச்சலுக்கு ஆளான சுமதி கடந்த 2016-ல் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதனை அடுத்து சிவகுருநாதன் மதுவுக்கு அடிமையாகியுள்ளார். இதனால் மிஸ்பா சாந்திக்கும், சிவகுருநாதனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு சிவகுருநாதன் தனது ஊரான மலையனூருக்கு வந்துள்ளார். அங்கு தனது முதல் மனைவியின் பிள்ளைகள் மற்றும் தாயுடன் தங்கி வந்தார். அதன் பின்னர் சிவகுருநாதன் மங்களூரில் உள்ள பர்னிச்சர் கடையில் வேலைக்கு சேர்ந்தார். கடந்த மூன்று ஆண்டுகளாக பேச்சு வார்த்தை இல்லாமல் இருந்த மிஸ்பா சாந்தி சில நாட்களுக்கு முன்பு பிள்ளை மற்றும் தாயுடன் புறப்பட்டு மலையனூருக்கு வந்துள்ளார்.

அப்போது, சிவகுருநாதனிடம், இனி நீங்கள் இங்குதான் இருப்போம், எங்களுக்கு வீடு எடுத்து தருமாறு கேட்டுள்ளார். அதன்படி, சிவகுருநாதன் அவர்களுக்கு தனியாக வீடு எடுத்து சாப்பாடு வாங்கியும் கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 30 ஆம் தேதி சிவகுருநாதன் சாப்பாடு வாங்கிக்கொண்டு மிஸ்பா சாந்தி தங்கியுள்ள வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டில் இருந்தவர்கள் மாயமாகியிருந்தனர். சிவகுருநாதன் அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தும் அவர்கள் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், அதே கிராமத்தில் விவசாயம் செய்து வரும் வேல்முருகன் என்பவது கிணற்றில் மிஸ்பா சாந்தி, அவரது தாய் மற்றும் பிள்ளை மூவரும் சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவம் இடத்துக்கு சென்ற போலீசார் தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் மூவரும் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்கள் தற்கொலை செய்துகொண்டார்களா அல்லது கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி