ஆப்நகரம்

ரயிலில் டிக்கெட் கேட்ட பரிசோதகரை பிளேடால் கீறிய ஆசாமிகள்

இரு ஆசாமிகளும் பரிசோதகரை கடுமையாக வசைபாட ஆரம்பித்துள்ளனர். திடீரென பிளேடு மூலம் டிக்கெட் பரிசோதகரைத் தாக்கியுள்ளனர். புகாரின் பேரில் அந்த இரண்டு ஆசாமிகளையும் ஆந்திர போலீசார் கைது செய்தனர்.

Samayam Tamil 21 Apr 2019, 4:57 pm
திருப்பதியில் டிக்கெட் எடுக்காமல் பயணித்த இருவர் ரயில் டிக்கெட் பரிசோதகரை பிளேடால் தாக்கியுள்ளனர்.
Samayam Tamil Indian-railway


திருப்பதியில் இருந்து சென்னை நோக்கி வந்த பயணிகள் ரயில் ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் நின்றபோது உமாமகேஸ்வரன் என்ற டிக்கெட் பரிசோதகர் பயணிகளிடம் சோதனை செய்துள்ளார்.

அப்போது அரக்கோணத்தை சேர்ந்த வெங்கடேஷ் மற்றும் விஜயன் ஆகியோர் டிக்கெட் எடுக்காமல் பயணிப்பைக் கண்டுபிடித்துள்ளார். டிக்கெட் இல்லாத நிலையில், திருதிருவென விழித்த இரு ஆசாமிகளும் பரிசோதகரை கடுமையாக வசைபாட ஆரம்பித்துள்ளனர்.

அத்துடன் நில்லாமல் திடீரென பிளேடு மூலம் டிக்கெட் பரிசோதகரைத் தாக்கியுள்ளனர். புகாரின் பேரில் அந்த இரண்டு ஆசாமிகளையும் ஆந்திர போலீசார் கைது செய்தனர்.

அடுத்த செய்தி