ஆப்நகரம்

திருபுவனம் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கு

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருபுவனம் துாண்டில் விநாயகம்பேட்டையைச் சேர்ந்த பாமக திருபுவனம் முன்னாள் நகர செயலாளர் ராமலிங்கம் (45), என்பவர் கடந்த பிப்., 5-ம் தேதி இரவு அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். தேசிய புலனாய்வு அமைப்பினர் ​இவ்வழக்கை விசாரித்து வருகின்றனர்.

Samayam Tamil 2 May 2019, 9:48 pm
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருபுவனம் துாண்டில் விநாயகம்பேட்டையைச் சேர்ந்த பாமக திருபுவனம் முன்னாள் நகர செயலாளர் ராமலிங்கம் (45), என்பவர் கடந்த பிப்., 5-ம் தேதி இரவு அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். தேசிய புலனாய்வு அமைப்பினர் இவ்வழக்கை விசாரித்து வருகின்றனர்.
Samayam Tamil murder-the-exhibition


இந்த கொலை வழக்கு தொடர்பாக ராமலிங்கத்தின் மகன் ஷியாம்சுந்தர் திருவிடைமருதுார் போலீஸில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் 16 பேர் மீது வழக்கு பதிந்து, இதுவரை படுகொலைக்கு பயன்படுத்தப்பட்ட காரின் டிரைவர் உள்பட 11 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்த கொலை வழக்கை தேசிய புலனாய் அமைப்பு விசாரிக்க வேண்டும் கோரிக்கை எழுந்தன. இதைதொடர்ந்து கடந்த மார்ச் 14ம் தேதி இவ்வழக்கு அவ்வமைப்புக்கு மாற்றப்பட்டன.
இதை தொடர்ந்து இவ்வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பு நேற்றுமுன்தினம் துவங்கியது.

கொச்சின் தேசிய புலனாய்வு அமைப்பின் ஏடிஎஸ்பி சவுக்கத்அலி தலைமையிலான 4 பேர் கொண்ட குழுவினர், திருவிடைமருதுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் குடியிருப்பில் தங்கியப்படி விசாரணையை துவக்கினர். முதற்கட்டமாக ராமலிங்கத்தின் மகன் ஷியாம் சுந்தரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

அதை தொடர்ந்து நேற்று காலை சிறையில் உள்ள 9 பெயரை குறித்த ஆவணங்களை ஆய்வு செய்து, அவர்களின் பின்புலன்களை குறித்த திருவிடைமருதுார் டிஎஸ்பி ராமச்சந்திரனிடம் கேட்டறிந்தனர். தொடர்ந்து 11 பேரை பற்றி முழுமையாக அறிய, அவர்களின் வீட்டிற்கு விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர். ஒரு மாதத்திற்குள்ளாக விசாரணை முடிக்க திட்டமிட்டுள்ளதாக போலீஸில் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் இன்று காலை சுமார் 4-30 மணியளவில் இருந்து தேடப்படும் குற்றவாளிகள் 3 பேர் உட்பட அனைவர் வீடுகளிலும் தேசிய புலனாய்வு பிரிவினர் கும்பகோணம் திருபுவனம் கரூப்பூர் திருவிடைமருதூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட தொடர்புடைய நபர்கள் வீடுகளில் தற்போது அதிரடி விசாரணையில் இறங்கியுள்ளனர்.

தேசிய புலனாய்வு அதிகாரிகள் பிஎஃப் ஐ அலுவலகத்தில் சோதனையை முடித்துள்ளனர்.

கும்பகோணம், திருச்சி, காரைக்கால் உள்ளிட்ட 20 இடங்களில் நடத்திய சோதனையில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் மொபைல் போன்கள், லேப்டாப்கள், கத்தி, வாள், 2 லட்ச ரூபாய் பணம் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர்.

ராமலிங்கம் கொலையில் தொடர்புடைய 16 பேரை கைது செய்ய இந்த தேடுதல் நடைபெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி