ஆப்நகரம்

அதிமுக எம்எல்ஏ கையை வெட்ட திரியும் நபர்... இந்த சம்பவத்தால் திருப்பூரில் பரபரப்பு

திருப்பூர் அருகே அதிமுக சட்டமன்ற உறுப்பினரின் கையை வெட்ட போவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

Samayam Tamil 29 Nov 2021, 2:27 pm
திருப்பூர் வடக்கு அதிமுக எம்எல்ஏவின் கையை வெட்ட‌ப் போவதாக பதாகையுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
Samayam Tamil tirupur aiadmk admk


திருப்பூர் கணக்கம்பாளையம் அடுத்த நாதம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நாககுமார் (50). இவர் வேலுச்சாமி என்பவரது வீட்டில் குடியிருந்து வந்தார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் இவரது வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் திருடு போயிருந்தது, இதுகுறித்து பெருமாநல்லூர் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் வீட்டு உரிமையாளர் மீது பெருமாநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

ஆனால் திருப்பூர் வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ விஜயகுமார் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய வேண்டாம் என, பெருமாநல்லூர் போலீசாரிடம் கூறியுள்ளதாகவும், அதன்பேரில் போலீசார் அவர்களை கைது செய்யவில்லை. பின்னர் வழக்கை திரும்ப பெற்றால், என்னுடைய வீட்டில் திருட்டுப்போன அனைத்து பொருட்களையும் வாங்கி தந்துவிடுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இது நாககுமார் கூறுகையில்,கடந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதி வழக்கை திரும்ப பெற்றுக் கொண்டேன். ஆனால் களவு போன உடமைகளை இதுவரை திருப்பி தரவில்லை.
இது தொடர்பாக பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறினார்.

மது கடைக்குள் புகுந்து ஒரு கேஸ் சரக்கை திருடி செல்லும் நபர்... வைரல் வீடியோ..!

இதனை அடுத்து ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த அவர், எனது வீட்டில் திருடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க விடாமல் தடுக்கும் திருப்பூர் வடக்கு எம்எல்ஏவின் கையை வெட்ட போவதாக பதாகைகளை ஏந்தி இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாககுமார் மனு அளிக்க வந்தார். இதையடுத்து போலீசார் அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

அதிமுக எம்.எல்.ஏ வின் கையை வெட்ட‌ப் போவதாக பதாகையுடன் வந்த நபரால் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அடுத்த செய்தி