ஆப்நகரம்

மனைவி ஒரு அறை, மகள் ஒரு அறையில் காதல் ஆட்டம்! கணவன் தூக்கிலிட்டு தற்கொலை

திருப்பூர் அருகே டிக்டாக் காதலனுடன் மனைவியும், மகளும் தலைமறைவானதால் கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 27 Aug 2020, 6:54 pm
திருப்பூர் மாவட்டம் பொம்மநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் ரவி. இவர் அப்பகுதியில் ஒர்க்ஷாப் நடத்தி வந்துள்ளார். ரவிக்கு கனகவள்ளி என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் கனகவள்ளிக்கு டிக்டாக் செயலில் அறிமுகமான ஈரோட்டைச் சேர்ந்த ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளைடைவில் நெருக்கம் ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil tiktok kanakavalli


கணவர் வீட்டில் இல்லாத நேரங்களில், செல்போன் மூலம் அவருடன் பேசிவந்துள்ளார் கனகவள்ளி. மேலும், இரவு நேரங்களில் இருவரும் மெசேஜில் காதல் வார்த்தைகளை பகிர்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில், 12 ஆம் வகுப்பு படித்து வந்த கனகவள்ளியின் மகளுக்கும் டிக்டாக் மூலம் ஈரோட்டைச் சேர்ந்த வேறொரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

தாய் ஒரு அறையில் மவுன ராக காதலையும், மகள் ஒரு அறையில் ராஜா ராணி காதலையும் வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில், மனைவியும், மகளும் தடம் மாறி செல்வதை தெரிந்துகொண்ட ரவி, அவர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். ஆனால், இருவரும் தங்களது காதலனுடன் சில நாட்களுக்கு முன்பு மாயமாகியுள்ளனர்.

இதனால் அனுப்பர்பாளைய காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில், ஈரோட்டில் தங்கியிருந்த மனைவியையும், மகளையும் போலீசார் மீட்டு வந்தனர். அப்போது அவர்களுக்கு அறிவுரையும் கூறப்பட்டது. ஆனால், தாய்க்கும், மகளுக்கும் தடம் மாறிய காதல் கண்ணை மறைத்ததால் ரவியின் கண்ணீர் எடுபடவில்லை. சில நாட்களுக்கு முன்பு மீண்டும் இருவரும் தங்களது காதலர்களுடன் ஓடி சென்ற நிலையில், ரவிக்கு செல்போனில் தொடர்புகொண்ட கனகவள்ளி, நான் காதலனுடன் தான் வாழ போகிறேன். என்னை தொந்தரவு செய்யாதீர்கள் என்று கூறி தொடர்பை துண்டித்துள்ளார்.

பறந்து சென்ற கிளி, உயிரை விட்ட சிறுமி... நீலகிரியில் சோகம்..!

மகளும் அவ்வழியே சென்று விட்டதால் மனமுடைந்த ரவி, '' என்னுடைய மகன் தாய், தகப்பன் இல்லாமல் இருக்க போகிறான். அவனை யாரும் பழி வாங்காதீர்கள். என் அக்கா, தங்கைகள் அனைவரின் கைகளில் என் மகனை நான் விட்டு செல்கிறேன்'' என வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ரவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

அடுத்த செய்தி