ஆப்நகரம்

இதென்ன பாக்சிங் போட்டியா? அரசு பள்ளி மாணவர்கள் வெறியாட்டம்...

சேத்துப்பட்டு அரசினர் மேல் நிலை பள்ளியில் மாணவர்கள் மோதிக்கொள்ளும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 28 Apr 2022, 7:56 pm
அரசு பள்ளியில் மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்க கூடாது என்று உத்தரவு பிறப்பித்த நாள் முதல் தற்போது வரை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மீதான பயம் போய்விட்டது.
Samayam Tamil அரசு பள்ளி மாணவர்கள் மோதல்


அதன் தாக்கமாக அடிக்கடி விடுமுறை எடுப்பது, வகுப்புக்கு தாமதமாக வருவது, ஆசிரியர்கள் கண்டித்தால் திருப்பி மிரட்டுவது, பள்ளி சீருடைகளை தங்களது இஷ்டத்துக்கு தைத்து அணிவது, ஆசிரியர்கள் அடித்தால் அதை வீடியோ எடுத்து வெளியிட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வைப்பது, சாதி பேரால் அச்சுறுத்துவது என ஆண்கள் அரசு பள்ளிகள் சிறார் சீர்திருத்த பள்ளிகளை போல மாறியுள்ளது.

மாணவர்கள் இன்றைக்கு என்ன தொந்தரவுகளை கொடுக்க போகிறார்களோ என்ற அச்சத்திலேயே ஒவ்வொரு நாளும் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வந்து செல்கின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அரசு பள்ளியில் ஒன்றில் மாணவர்கள் இருவர் மாறி மாறி அடித்துக்கொள்வதும் அதை குத்துச்சண்டையை பார்ப்பது போல சக மாணவர்கள் வேடிக்கை பார்த்து கை தட்டும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.


டிஜிபியின் அறிவுரை என்னாச்சு..? சரமாரியாக அடித்துக்கொள்ளும் பள்ளி மாணவர்கள்

அண்மையில் இதேபோல, திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் அரசு மேல்நிலைபள்ளியில் 12 ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சஞ்சய்காந்தி என்ற தாவிரவியல் ஆசிரியரை மாணவர்கள் இரண்டு பேர் அடிக்க பாய்ந்து தகாத வார்த்தையில் பேசிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுபோல பல பள்ளிகளில்
அத்துமீறி நடந்துகொண்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும் சம்பவங்கள் குறைந்த பாடில்லை...

அடுத்த செய்தி