ஆப்நகரம்

லஞ்சம் வாங்கிய உயர் அதிகாரி-தட்டிக்கேட்ட அலுவலர் மீது தாக்குதல்!

உயர் அதிகாரி லஞ்சம் கேட்டதை தட்டிக்கேட்ட மின்சார வாரிய உதவி கணக்கு அலுவலர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 25 May 2019, 12:27 pm
திருப்பத்தூர் அருகே உயர் அதிகாரி லஞ்சம் கேட்டதை தட்டிக்கேட்ட மின்சார வாரிய உதவி கணக்கு அலுவலர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil லஞ்சம் வாங்கிய உயர் அதிகாரி-தட்டிக்கேட்ட அலுவலர் மீது தாக்குதல்!
லஞ்சம் வாங்கிய உயர் அதிகாரி-தட்டிக்கேட்ட அலுவலர் மீது தாக்குதல்!


வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வீட்டு வசதி வாரியத்தில் வசித்து வருபவர் சிவாஜி (51). இவர் 27 ஆண்டுகளாக திருப்பத்தூர் மின்சார வாரிய செயற் பொறியாளர் அலுவலகத்தில் உதவி கணக்கு அலுவலராக பணிபுரிந்து வருகிறார். அதே இடத்தில் செயற்பொறியாளராக கிருஷ்ணன் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் கிருஷ்ணன் உயர்ந்த பொறுப்பில் இருப்பதால் பலரிடம் லஞ்சம் பெறுவதாகவும், மேலும் அத்துறையில் பணிபுரியும் பெண்களிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையறிந்த சிவாஜி, கிருஷ்ணனிடம் நீங்கள் செய்வது தவறு என பலமுறை எச்சரித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு இருக்கிறது.இதையடுத்து சிவாஜி தலைமை பொறியாளருக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணன் நேற்று, வழக்கம்போல் பணிக்கு வந்த சிவாஜியை அலுவலக நேரத்தில் தனது ரூமில் பூஜை செய்யலாம் வா என்று அழைத்திருக்கிறார். அதற்கு சிவாஜி இது அலுவலக நேரம். என்னால் தற்போது வர முடியாது என்று மறுத்துள்ளார். மேலும் கிருஷ்ணன் பூஜை செய்வதை தனது மேல் அதிகாரிக்கு அனுப்ப புகைப்படம் எடுத்துள்ளார்.

இதனை பொறுத்துக் கொள்ள முடியாத கிருஷ்ணன் திடீரென ஆவேசம் அடைந்து சிவாஜியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்தில் மயங்கி விழுந்தார். இதனை அறிந்த சக பணியாளர்கள் சிவாஜியை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தவறை தட்டிக் கேட்ட அலுவலரை, உயரதிகாரி தாக்கியது சக பணியாளர்களிடம் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி