ஆப்நகரம்

டிஎன்பிஎஸ்சி முறைகேடு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ‘தேர்ச்சி’!

டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

Samayam Tamil 29 Jan 2020, 12:30 pm
ராமேஸ்வரம், கீழக்கரை ஆகிய இரு தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் அரசு அதிகாரிகள், ஊழியர்களின் உதவியுடன் முறைகேட்டில் ஈடுபட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Samayam Tamil டிஎன்பிஎஸ்சி முறைகேடு


இதுதொடர்பான விசாரணையை சிபிசிஐடி போலீஸார் ஐந்து நாட்களாக மேற்கொண்டனர். இதில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று ஆறாம் நாளாக விசாரணை நடைபெற்றுவருகிறது.

நானும் தீவரவாதி தான் சார்: சீமான் கலகல வாக்குமூலம்!

இந்த விவகாரம் சமூக வலைதளங்களிலும் விவாதத்தை கிளப்பியுள்ளது. அப்போது காவல்துறை உதவி ஆய்வாளரின் குடும்பத்தில் நான்கு பேர் குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றது குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டது. இது குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து சிபிசிஐடி போலீஸார் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முள் குத்தியதற்கு செய்தியாளர் சந்திப்பு: அதீத ஊடக வெளிச்சத்தால் ஊதித் திளைக்கிறாரா ரஜினி...

காவல்துறை உதவி ஆய்வாளரின் மனைவி, இரண்டு தம்பிகள், தம்பி மனைவி ஆகிய நான்கு பேர் குரூப் 2 தேர்வில் முதல் பத்து இடங்களில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்கள் நான்கு பேரும் சிவகங்கையில் பணியாற்றுவதாகவும் கூறப்படுகிறது.

ரஜினிக்கு எதிரான வருமானவரித் துறை வழக்கு திடீரென வாபஸ்... 66 லட்சம் ரூபாய் 'ஹோகயா'

உதவி ஆய்வாளரின் தம்பி குரூப் 2 தேர்வில் இரண்டாம் இடத்திலும், தம்பி மனைவி ஆறாம் இடத்திலும் தேர்வாகியுள்ளனர். இவர்கள் நான்கு பேரும் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதியுள்ளனர்.

இதுகுறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

அடுத்த செய்தி