ஆப்நகரம்

கணவனை கத்தியால் குத்தி கொலை செய்த திருநங்கை மனைவி!

சென்னை அருகே கணவனை கத்தியால் குத்தி கொலை செய்த திருநங்கை மனைவியை போலீசார் கைது செய்தனர்.

Samayam Tamil 29 Apr 2019, 2:13 pm
சென்னை அருகே அடகு வைத்த தனது நகையை மீட்டுக் கொடுக்காத கணவனை கத்தியால் குத்தி கொலை செய்த திருநங்கை மனைவியை போலீசார் கைது செய்தனர்.
Samayam Tamil கணவனை கத்தியால் குத்தி கொலை செய்த திருநங்கை மனைவி!
கணவனை கத்தியால் குத்தி கொலை செய்த திருநங்கை மனைவி!


காஞ்சிபுரம் மாவட்டம் வாலஜாபாத்தை சேர்ந்தவர் அஜித்குமார்(25). இவர் திருவல்லிக்கேணி பல்லவன் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, வேலை செய்து வந்தார். அஜித்குமாரும், ரகோத்தமன் (எ) ரதி என்ற திருநங்கையும் கடந்த ஒரு வருடம் முன், திருமணம் செய்து கொண்டு, ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு அஜித் குமார் கத்திகுத்து காயங்களுடன் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அவர் உயிரிழந்தார்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், திருநங்கை ரதியை பிடித்து விசாரணை நடத்தியதில் அஜித்குமாரை கத்தியால் குத்தி கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். அவரது வாக்குமூலத்தில், அஜித்குமாருக்கும். எனக்கும் கடந்த ஒரு வருடம் முன் திருமணமானது. அஜித், அடகு வைத்த தனது நகையை மீட்டு கொடுக்காததால் கடந்த வெள்ளிக்கிழமை இரவு எங்களுக்குள் சண்டை நடந்தது. அப்போது என்னை தாக்கிய அஜித்குமாரின் தொண்டையில் கத்தியால் குத்தி கொலை செய்தேன்” என்று பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

இதையடுத்து அந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்த போலீசார் ரதியை கைது செய்து, சிறையிலடைத்தனர்.

அடுத்த செய்தி