ஆப்நகரம்

சென்னையில் பரபரப்பு... சிறார் ஆபாச படம் பார்த்த ஆசிரியை மகன் கைது..! ரவுண்டு கட்டும் போலீஸ்...

சிறார் ஆபாச படங்களை பார்த்து பகிர்ந்து வந்த சென்னை வாலிபரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 30 Jan 2020, 1:44 pm
சிறார்களின் ஆபாச படங்கள் பார்க்கும் பட்டியலில் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளதாக வெளியான அதிர்ச்சி தகலவையடுத்து காவல் துறை தீவிர நடவடிக்கையை எடுத்து வருகிறது.
Samayam Tamil சிறார் ஆபாச படம் பார்த்த ஆசிரியை மகன் கைது


சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த டியூஷன் ஆசிரியை மகன் ஹரிஷ் (24) . இவர் 11 ஆம் வகுப்பு படித்து வந்த போதே குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பதில் ஆர்வம் கொண்டுள்ளார். இந்த நிலையில் 500 க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆபாச படங்களை செல்போனில் பதிவிறக்கம் செய்துகொண்ட ஹரிஷ் அதை தனது நண்பர்களுக்கும் பகிர்ந்து வந்துள்ளார்.

சென்னையில் சிறார் ஆபாச படங்களை பார்த்த 600 பேர் பட்டியலை கையிருப்பு வைத்திருக்கும் போலீசார் அவர்களின் ஐபி முகவரிகளை கொண்டு மேற்பார்வை செய்து வருகின்றனர். தற்போது இந்த குற்றத்தின் அடிப்படையில் ஹரிஷ் பிடிபட்டுள்ளார்.

டிஎன்பிஎஸ்சி முறைகேடு: பின்னணியில் உள்ள ஐபிஎஸ் அதிகாரி யார்?

அம்பத்தூர் டியூஷன் ஆசிரியை மகனான ஹரிஷை அவரது வீட்டிற்கே சென்று போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெற்றோருக்கு பெரும் தலை குனிவை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ச்சியாக நடந்து வரும் நிலையில், சிறார்களின் ஆபாச படங்களை பார்க்க வேண்டாம் என டிஜிபி ரவி எத்தனையோ முறை எச்சரித்தும் அதை பொருட்படுத்தாத நபர்கள் கைதாகி சிறைக்கு செல்லும் நிகழ்வுகள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகின்றன. தமிழகத்தில் இதுவரை இந்த வழக்கில் 15 க்கும் மேற்பட்டோர் கைதாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி