ஆப்நகரம்

விமான நிலையத்தில் ஆமைகள் பறிமுதல்!

ராமநாதபுரத்தைச் சேர்ந்த 2 பயணிகள் தாங்கள் எடுத்து வந்த உடமைகளில் ஆமைகளை மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்துள்ளது

Samayam Tamil 24 Nov 2019, 8:46 pm
திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Samayam Tamil கடத்தப்பட்ட ஆமைகள்
கடத்தப்பட்ட ஆமைகள்


மருந்துகள், உணவு உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளுக்காக ஆமை இனங்கள் கடத்தப்படுகின்றன. சில வீடுகளில் ஆமைகள் செல்லப் பிராணிகளாகவும் வளர்க்கப்படுகின்றன. சர்வதேச சந்தையில் ஆமைகள் நல்ல விலை போவதால் ஆமை இனங்களின் கடத்தல் வணிகம் அதிகரித்துள்ளது.

அந்த வகையில், திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இலங்கையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் இன்று காலை திருச்சி விமான நிலையம் வந்தடைந்தது.

பெண்ணை தாக்கி வளர்ப்பு சேவலை கொன்றதாக 7 பேர் மீது வழக்கு..!

விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவர்களது உடமைகளை, மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, ராமநாதபுரத்தைச் சேர்ந்த 2 பயணிகள் தாங்கள் எடுத்து வந்த உடமைகளில் ஆமைகளை மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்துள்ளது.

ராமநாதபுரம்: பயிர் இன்சூரன்ஸ் பதிவதற்கு லஞ்சம்- வசமாக மாட்டிய அதிகாரி!

அதைத்தொடர்ந்து, அவர்களிடமிருந்து ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டு, வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன. ஆமைகளை கடத்தி வந்த இருவரிடமும் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி