ஆப்நகரம்

குளத்தில் மூழ்கி இரட்டையர் சகோதரிகள் உயிரிழப்பு : மணப்பாறை அருகே துயர சம்பவம்

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே இரட்டை சகோதரிகள் குளத்தி்ல் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 22 Nov 2019, 12:30 am
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம். மினிக்கியூர் அருகேயுள்ள மகிளிபட்டியை சேர்ந்தவர் மணி என்ற அழகப்பன்.
Samayam Tamil WhatsApp Image 2019-11-21 at 22.16.45.


விவசாயியான இவரது இரட்டை பெண் பிள்ளைகளான ரமணி ( 18 ), லெட்சுமி (18) ஆகிய இருவரும் வியாழக்கிழமை மாலை தனது தாயார் வளர்மதியுடன் மகிளிபட்டி குளத்தில் குளிக்கச் சென்றனர்.

அப்போது எதிர்பாராத விதமாக இருவரும் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கினர். தாயாரின் அழுகுரலை கேட்டு, ஓடி வந்த கிராமத்தினர் துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் குளத்தில் மூழ்கி ஆழத்தில் சென்ற இருவரையும் உயிரிழந்த நிலையில் மீட்டனர்.

திருச்சி: வழிப்பறி கொள்ளையனுக்கு ஏழு ஆண்டுகள் சிறை!

ரமணி தனியார் கலை அறிவியல் கல்லூரியில் பி.எஸ்சி., முதலாம் ஆண்டு படித்து வந்தார். லெட்சுமி பிளஸ் 2 முடித்துவிட்டு திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

இவரது சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.

தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகர், பெற்றோர்கள் மற்றும் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த சம்பவம் குறித்து வளநாடு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இரட்டை இளம் சகோதரிகள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி