ஆப்நகரம்

விழுப்புரத்தில் தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபர்கள் 2 பேர் கைது

விழுப்புரத்தில் தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இரண்டு இளைஞர்கள் போக்சோவில் கைது.

Samayam Tamil 28 Jan 2022, 7:06 pm
திருவெண்னைய்நல்லூரில் வீட்டில் தனியாக இருந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த 2 இளைஞர்களை போக்சோ சட்டத்தின் கீழ் விழுப்புரம் மகளிர் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
Samayam Tamil villupuram pocso arrest
villupuram pocso arrest


விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பூசாரிப்பாளையத்தை சேர்ந்த 17 வயதுடைய சிறுமி தனதுவீட்டில் கடந்த 4 ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்துள்ளார். சிறுமியின் வீட்டில் யாருமில்லாததை அறிந்து கொண்ட அதே கிராமத்தை சேர்ந்த பாலு (30), பாரதிராஜா (29) ஆகிய இருவரும் சிறுமியின் வீட்டிற்குள் நுழைந்து அத்துமீறி அங்கிருந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

இதனையடுத்து சிறுமி கூச்சலிடவே பாலியல் தொந்தரவு அளித்த இருவரும் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். பின்னர் இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி, தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார்.

மகனை கொலை செய்து உடலை சைக்கிளில் ஏற்றி வந்து எரித்த தந்தை: மதுரை அதிர்ச்சி சம்பவம்

இதனைகேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து பாலு, பாரதிராஜா ஆகிய இருவரை போக்சோ சட்டத்தின் கீழ் இருவரையும் கைது செய்து விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேடம்பட்டில் உள்ள சிறையில் அடைத்தனர்.

அடுத்த செய்தி