ஆப்நகரம்

மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறிப்பு - குமரியில் இருவர் கைது..!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட இரு வாலிபர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 13-சவரன் தங்க நகைகள் மற்றும் மூன்று இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

Samayam Tamil 14 Aug 2022, 6:10 pm
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அடுத்த அப்பட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் மேரி ரெத்தினம் 60 வயது. மூதாட்டியான இவர் கடந்த மே மாதம் 14ம் தேதி அந்த பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார்
Samayam Tamil crime


அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் மேரி ரெத்தினத்தின் கழுத்தில் கிடந்த 4 சவரன் தங்க சங்கிலியை பறித்து இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றனர். இதுகுறித்து மேரி ரெத்தினம் தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீசார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தங்க சங்கிலியை அறுத்து சென்ற மர்ம நபர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில், நேற்று தக்கலை பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது சந்தேகத்திற்கு இடமாக ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் இருவரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த வாலிபர்கள் தென்காசி பகுதியை சேர்ந்த நவீன் ஆன்றணி ராஜா மற்றும் வினித் என்பதும் தெரியவந்தது. தொடர் விசாரணையில் இருவரும் மூதாட்டி மேரி ரெத்தினத்தின் தங்க சங்கிலியை பறித்து சென்றதும் குலசேகரம் மற்றும் திருவட்டார் காவல் நிலைய பகுதிகளில் தொடர் தங்க சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது

இதனையடுத்து அவர்களிடம் இருந்து 13 சவரன் தங்க சங்கிலிகளை மீட்ட தக்கலை போலீசார் சங்கிலி பறிப்புக்கு பயன்படுத்திய 3-இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்ததோடு இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அடுத்த செய்தி