ஆப்நகரம்

தங்கம் விக்கிற விலைக்கு 17 கிலோவை கடலில் தூக்கி எறிந்த நபர்கள்..!

ராமேஸ்வரம் முயல் தீவு அருகே கடத்தி வந்த தங்கக்கட்டிகளை தண்ணீரில் தூக்கி எறிந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 4 Mar 2020, 5:55 pm
இலங்கையில் இருந்து தங்கக்கட்டி, வாசனை பொருட்கள், நறுமண சோப்பு வகைகள் மற்றும் தமிழகத்தில் இருந்து கஞ்சா, பீடி இலைகள் உள்ளிட்ட போதை பொருட்கள் கடல் வழியாக மர்மப் படகு மூலம் கடத்தப்பட்டு வருவதாக குற்றசாட்டுகள் நீடித்து வருகின்றன. தீவிர கண்காணிப்பு, பாதுகாப்பு கெடுபிடிகளையும் தாண்டி கடத்தல் தொழிலை மர்மகும்பல் தங்கள் ஏஜெண்டுகள் மூலம் கமிஷன் அடிப்படையில் எவ்வித தொய்வின்றி அரங்கேற்றி வருகின்றனர்.
Samayam Tamil தங்கம் விக்கிற விலைக்கு 17 கிலோவை கடலில் தூக்கி எறிந்த நபர்கள்


இந்நிலையில், இலங்கையில் இருந்து கடத்தி வந்த தங்கக் கட்டிகள் ராமேஸ்வரம் அருகே மன்னார் வளைகுடா முயல் தீவு மணலில் கடத்தல் கும்பல் புதைத்து வைத்திருப்பதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு மார்ச் 3 ஆம் தேதி தகவல் கிடைத்தது .

இதன்படி தீவு பகுதியில் கண்காணிப்பு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்து வந்த இருவரை விசாரித்ததில் அவர்கள் மண்டபம் அருகே மரைக்காயர்பட்டினத் சேர்க்க ஆஷிக் 22, பாரூக் 22 ஆகியோர் என தெரிந்தது.

'ஆவியாக வந்து பழிவாங்குவோம்'..! விவசாயி குடும்பத்துடன் தற்கொலை...

அவர்கள் இலங்கையில் இருந்து கடத்தி வந்த தங்கத்தை முயல் தீவு அருகே தண்ணீரில் போட்டு விட்டதாக கூறினர். இதையடுத்து, நீச்சல் வீரர்களை கடலில் இறக்கி ஜிபிஎஸ் கருவி மூலம் சோதனையிட்டு தண்ணீரில் கிடந்த 17 கிலோ தங்கத்தை கைப்பற்றினர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.6.80 கோடி என கூறப்படுகிறது.

இலங்கையில் இருந்து கடல் வழியாக கடத்திவரப்படும் தங்கம் உள்ளிட்ட பொருட்களை மன்னார் வளைகுடா தீவு மணலில் புதைத்து வைக்கும் புதுயுக்தியை சமீப காலமாக பின்பற்றி வருகின்றனர்.

மணலில் புதைத்துள்ள தங்கக்கட்டிகளை ஏஜன்ட்கள் படகுகள் மூலம் கரை சேர்க்கின்றனர். இங்கிருந்து காரில் சென்னை கொண்டு சென்று விற்று பணமாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி