ஆப்நகரம்

ஈரோட்டில் அண்ணன், தம்பி படுகொலை; இரவில் நடந்த பயங்கரம்..!

ஈரோட்டில் முன் விரோதம் காரணமாக அண்ணன், தம்பி இருவரும் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 31 Jan 2023, 4:51 pm
ஈரோட்டில் முன் விரோதம் காரணமாக உறவினர் ஒருவர் அண்ணன், தம்பி இருவரையும் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Samayam Tamil erode murder


ஈரோடு முனிசிபல்காலனி, கிருஷ்ணசாமி வீதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவரது மகன்கள் கௌதம், கார்த்திகேயன் இருவரும் வீட்டிலேயே மசாலா பொடி, தேன், செக்கு எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், இவரது உறவினரான மாணிக்கம் பாளையத்தை சேர்ந்த ஆறுமுகசாமி என்பவர் நேற்றிரவு கௌதம் வீட்டிற்கு சென்று வீட்டிற்கு வெளியே அண்ணன் தம்பி இருவரையும் அழைத்து வந்து பேசி உள்ளார். இதில் உறவினர் ஆறுமுகசாமிக்கும் அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து ஆத்திரமடைந்த ஆறுமுகசாமி திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இருவரையும் சரமாரியாக குத்தி விட்டு தப்பியோடி உள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அண்ணன் தம்பி இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து ஈரோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு கிழக்கு தொகுதியியல் இடைத்தேர்தல் நெருங்குவதால் அரசியல் கட்சிகள் அங்கு முகாமிட்டுள்ளன. மேலும், கொலை செய்யப்பட்ட கார்த்திகேயன் நாம் தமிழர் கட்சி ஈரோடு கிழக்கு தொகுதியின் பொருளாளர் ஆவார். இதனால் அவரது படுகொலை அரசியல் ரீதியாகவும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன் விரோதம் காரணமாக உறவினர் ஒருவர் அண்ணன், தம்பி இருவரையும் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமகன் ஈவெரா மறைவால் ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டதை அடுத்து இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது. அதன்படி, ஜனவரி 31 ஆம் தேதி முதல்
பிப்ரவரி 7 வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம், பிப்ரவரி 27 ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தி மார்ச் 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் இடைத்தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

அடுத்த செய்தி