ஆப்நகரம்

இவங்க தான் அந்த ரெண்டு பேர்; லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் உண்மை தெரிஞ்சுடுச்சி!

லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் முகமூடி அணிந்து, யார் கொள்ளையடித்தார்கள் என்று போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Samayam Tamil 13 Oct 2019, 2:44 pm
தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றாக திருச்சி திகழ்கிறது. இங்கு பரபரப்பாக காணப்படும் சத்திரம் பேருந்து நிலையத்தின் அருகே லலிதா ஜுவல்லரி கடை அமைந்துள்ளது. அங்கு கடந்த 2ஆம் தேதி மிகப்பெரிய கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த கடையின் பின்புறத்தில் துளையிட்டு உள்ளே நுழைந்துள்ளனர். கடையில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளை அடித்துச் சென்றனர்.
Samayam Tamil Lalitha Jewellery


இந்த சம்பவத்தின் போது கடையை சுற்றி 6 பாதுகாவலர்கள், இரவுப் பணியில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் இருவர் கடைக்கு உள்ளே நுழைவது தெரிகிறது. அவர்கள் ஜோக்கர் போன்ற முகமூடிகள் அணிந்து கொண்டு, நகைகளை திருடிச் சென்றுள்ளனர். இதற்கு பின்னணியில் ‘Money Heist' என்ற த்ரில்லர் சீரியல் இருப்பதாக கூறப்படுகிறது.

கோவையில் இருந்து சார்ஜாவுக்கு கஞ்சா கடத்தல்: கேரள இளைஞர் கைது

கீழ் தளத்தில் இருந்த அனைத்து நகைகளையும் எடுத்துக் கொண்டு, பின் முதல் தளத்தில் இருந்த நகைகளையும் எடுத்துச் சென்றுள்ளனர். இவர்கள் வடமாநில கொள்ளையர்களாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. ஆனால் கொள்ளையடித்துச் சென்றவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. இதுதொடர்பாக அருகிலுள்ள பகுதிகளில் வாகன சோதனை நடத்தப்பட்டது.

இந்த சூழலில் சம்பவத்தில் தொடர்புடைய திருவாரூரைச் சேர்ந்த மணிகண்டன், அவரது கூட்டாளி சுரேஷின் தாய் கனகவள்ளி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4.8 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கொள்ளை சம்பவத்தில் முருகன் என்ற நபர் மூளையாக செயல்பட்டது கண்டறியப்பட்டது.

பிரதமர் மோடி சொந்தகாரர் கிட்டயே ஆட்டைய போட்ட திருடர்கள்- சும்மா விடுமா போலீஸ்?

இவர் நாடு முழுவதும் பல்வேறு வங்கி, ஏடிஎம் கொள்ளைகளில் தொடர்புடையவர் ஆவார். இவரைப் பிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். இதற்கிடையில் முக்கிய குற்றவாளியான முருகனின் அண்ணன் மகன் முரளி கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து முருகன் மற்றும் சுரேஷின் உறவினர்களைப் பிடித்து போலீசார் விசாரித்து வந்தனர்.

அதாவது, 15 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் கொள்ளை வழக்கில் தீவிரமாக தேடப்பட்டு வந்த முருகன், பெங்களூரு 11வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். இவரை விசாரித்த நீதிபதி, பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் முகமூடி அணிந்து வந்து, லலிதா ஜுவல்லரி கடையில் கொள்ளையடித்தது முருகனும், சுரேஷும் என்று உறுதிப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

தாறுமாறா ஓடிய ஆம்னி; தருமபுரி அருகே அதிர்ச்சி- பொதுமக்களுக்கு நடந்த பயங்கரம்!

அடுத்த செய்தி