தமிழகத்தில் புரேவி புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் மட்டுமின்றி காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மற்றும் அதிகாலையில் பெய்த கனமழை காரணமாக காஞ்சிபுரத்தில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. மழையுடன் சேர்ந்து காற்றும் வீசியதால் ஈஞ்சம்பாக்கம் பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.
இந்த நிலையில், ஈஞ்சம்பாக்கம் கிராமத்தில் மின் கம்பிகள் அறுந்து கிடப்பதாக மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில், மின்வாரிய ஊழியரான பாக்கியநாதன் என்பவர் தனக்கு உதவியாக தயாளன் என்பவரை அழைத்துக்கொண்டு சம்பவ இடத்துக்கு சென்றார். கொட்டும் மழை, அடித்த காற்றையும் பொருட்படுத்தாமல் அங்குள்ள டிரான்ஸ்பார்மில் இருவரும் பழுது பார்த்து கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக மின் கம்பிகள் அறுந்து அவர்களுக்கு மேலே விழுந்துள்ளது. அதனால் மின்சாரம் பாய்ந்து இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். அதனை கண்டு அதிர்ந்து போன அப்பகுதி மக்கள் உடனே காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
காதலனுக்கு முதலிரவு, படுக்கை அறையில் பரபரப்பு..! அதிர்ந்து போன உறவினர்கள்
சம்பவ இடத்துக்கு வந்த போலீசாரும், மின்சார ஊழியர்களும் சேர்ந்து இருவரது உடல்களையும் மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக இருவரது உடல்களும் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மேற்படி விசாரணை நடத்தி வருகின்றனர்.
புயல், மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மின் கம்பங்கள் சாய்வதும், மின் கம்பிகள் அறுந்து விழுவதுமான அபாயங்கள் ஏற்படுகின்றன. அப்படியான சூழலில் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் பணியில் ஈடுபடும் மின்வாரிய ஊழியர்கள் உயிரிழப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்துகிறது.
இந்த நிலையில், ஈஞ்சம்பாக்கம் கிராமத்தில் மின் கம்பிகள் அறுந்து கிடப்பதாக மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில், மின்வாரிய ஊழியரான பாக்கியநாதன் என்பவர் தனக்கு உதவியாக தயாளன் என்பவரை அழைத்துக்கொண்டு சம்பவ இடத்துக்கு சென்றார். கொட்டும் மழை, அடித்த காற்றையும் பொருட்படுத்தாமல் அங்குள்ள டிரான்ஸ்பார்மில் இருவரும் பழுது பார்த்து கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக மின் கம்பிகள் அறுந்து அவர்களுக்கு மேலே விழுந்துள்ளது. அதனால் மின்சாரம் பாய்ந்து இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். அதனை கண்டு அதிர்ந்து போன அப்பகுதி மக்கள் உடனே காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
காதலனுக்கு முதலிரவு, படுக்கை அறையில் பரபரப்பு..! அதிர்ந்து போன உறவினர்கள்
சம்பவ இடத்துக்கு வந்த போலீசாரும், மின்சார ஊழியர்களும் சேர்ந்து இருவரது உடல்களையும் மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக இருவரது உடல்களும் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மேற்படி விசாரணை நடத்தி வருகின்றனர்.
புயல், மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மின் கம்பங்கள் சாய்வதும், மின் கம்பிகள் அறுந்து விழுவதுமான அபாயங்கள் ஏற்படுகின்றன. அப்படியான சூழலில் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் பணியில் ஈடுபடும் மின்வாரிய ஊழியர்கள் உயிரிழப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்துகிறது.