ஆப்நகரம்

குளிக்க சென்ற நண்பர்கள் நீரில் மூழ்கி மரணம் - கோவையில் சோக சம்பவம்

குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் இருவர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 25 Jun 2022, 4:31 pm
கோவை காளியாபுரம் சின்னைய கவுண்டர் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய் (வயது 17). இவரும், அதேபோல க.க.சாவடி பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய்குமார் (17) இருவரும் டவுன்ஹால் பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகின்றனர்.
Samayam Tamil kovai news


இந்த நிலையில் இவர்களுடன் சேர்ந்து நண்பர்கள் 3 பேரும் காளியாபுரம் பகுதியில் உள்ள கல்லு குழியில் குளிக்க சென்றுள்ளனர். இதனையடுத்து மூன்று நண்பர்கள் குளித்துவிட்டு வெளியே வந்துள்ளனர். ஆனால் தண்ணீரில் இருவர் மட்டும் சிக்கிக்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து கிணத்துக்கடவு தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சஞ்சய் மற்றும் சஞ்சய் குமார் ஆகிய இருவரை மீட்டனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டனர்.

கல்லூரி பேராசிரியை அரிவாளால் வெட்ட வந்த சைக்கோ... ஒரு தலை காதல்?

இதனையடுத்து இருவரின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அடுத்த செய்தி