ஆப்நகரம்

தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் லஞ்சம் வாங்கிய இரு அரசு ஊழியர்கள் கைது!

மதுரை மற்றும் திருத்தணி பகுதிகளில், வெவ்வேறு காரணங்களுக்காக லஞ்சம் வாங்கிய இரு அரசு ஊழியர்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்!

Samayam Tamil 31 Jul 2019, 9:11 pm
கட்டிட வரைபட அனுமதி வழங்க 12 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
Samayam Tamil தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் லஞ்சம் வாங்கிய இரு அரசு ஊழியர்கள் கைது!
தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் லஞ்சம் வாங்கிய இரு அரசு ஊழியர்கள் கைது!


மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த ஜெகதீஷ். மதுரை காதக்கிணறு பகுதியில் உள்ள இவருடைய உறவினருக்கு சொந்தமான 3 செண்டு இடத்தில் வீடு கட்டுவதற்காக, வரைபட அனுமதி கேட்டு மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விண்ணப்பம் செய்துள்ளார்.

நீன்ட நாட்களாகியும் வரைபட அனுமதி வழங்காத நிலையில், இதுகுறித்து அலுவலும் சென்று கேட்டபோது அலுவலக உதவியாளர் ராமநாதன், தனக்கு 12 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால்தான் வரைபட அனுமதி வழங்குவோம் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜெகதீஷ் மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையிடம் புகார் தெரிவித்தார்.

வரைபடம் வழங்க ரூ. 5000 லஞ்சம் கேட்கும் அரசு அதிகாரி- மக்கள் போராட்டம்!

இதனை அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையிலான போலீசார், ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை ராமநாதனிடம் கொடுக்கும் போது, கையும் களவுமாகப் பிடிபட்டார். இதுகுறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கட்டணம் குறைப்பு: தமிழக முதல்வர் அறிவிப்பு!

திருத்தணியில் லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த ஆர்.கே. ஒன்றியத்திற்குட்பட்ட வி.கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் தனது விவசாய நிலத்தை அளந்து கொடுக்க ஆர்.கே.பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் நில அளவையர் சரவணனை அணுகியுள்ளார். அப்போது ரூ.2,500 கொடுத்தால் மட்டுமே நிலத்தை அளந்து கொடுக்க முடியும் என சரவணன் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஷ் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு புகார் அளித்துள்ளார்.

நெல்லையிலும் பரவிய போலீசாரின் கை உடைக்கும் கலாச்சாரம்!

டி.எஸ்.பி., சிவபாதசேகரன் தலைமையிலான போலீசார் அறிவுறுத்தலின் பேரில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை நிலத்தை அளக்கும் இடத்திலேயே ராஜேஷ் நில அளவையர் சரவணனிடம் கொடுத்துள்ளார். அதை வாங்கும் போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சரவணனை கையும் களவுமாக கைது செய்தனர். தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து முழு விசாரணை முடிந்த பிறகு, திருத்தணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அடுத்த செய்தி