ஆப்நகரம்

ஆன்லைன் மூலமாக TDs தொகையை பல கோடி அளவில் கையாடல் செய்த இருவர் கைது!

சேலம் செரி ரோட்டில் சித்திக் மற்றும் ஸ்ரீதர் ஆயோர், எம்.எஸ் அசோசியேட் என்ற பெயரில் பேன் கார்டு பெற்று தருவது மற்றும் TDs தொகையை பெற வருமான வரித் துறைக்கு பரிந்துறை செய்வதற்கான முகவர் அனுமதியை பெற்றுள்ளனர்.

Samayam Tamil 11 Jul 2019, 4:28 pm
ஆன்லைன் மூலமாக TDs தொகையை பல கோடி அளவில் கையாடல் செய்த சேலத்தை சேர்ந்த இருவரை பேரை கர்நாடக உளவு துறை காவலர்கள் கைது செய்தனர்.
Samayam Tamil ஆன்லைன் மூலமாக TDs தொகையை பல கோடி அளவில்  கையாடல் செய்த இருவர் கைது!
ஆன்லைன் மூலமாக TDs தொகையை பல கோடி அளவில் கையாடல் செய்த இருவர் கைது!


சேலம் செரி ரோட்டில் சித்திக் மற்றும் ஸ்ரீதர் ஆயோர், எம்.எஸ் அசோசியேட் என்ற பெயரில் பேன் கார்டு பெற்று தருவது மற்றும் TDs தொகையை பெற வருமான வரித்துறைக்கு பரிந்துறை செய்வதற்கான முகவர் அனுமதியை பெற்றுள்ளனர்.

மத்திய அரசின் நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்து, முகவர்களாக செயல்பட்டு வரும் சித்திக் மற்றும் ஸ்ரீதர், ஆடிட்டர்களோடு மட்டும் அல்லாது அரசு துறை ஊழியர்கள், தனியார் நிறுவன தொழிலாளர்களின் கணக்கு வழக்கினை சரிபார்த்து, TDsக்கான பரிந்துரையை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இவர்கள் மீது பெங்களூருவில் செயல்படும் தனியார் நிறுவனம் காவல்துறையில் மோசடி புகார் அளித்தது. அதில், சேலத்தை சேர்ந்த சித்திக் மற்றும் ஸ்ரீதர் ஆகிய இருவரும், அரசு ஒப்பந்த அடிப்படையில் நடத்தி வரும் நிறுவனம் மூலமாக தனியார் நிறுவன ஊழியர்களின் TDs தொகையை பல கோடி அளவில் கையாடல் செய்துள்ளதாக புகார் அளித்திருந்தது.

அதன் அடிப்படையில் ரகசிய விசாரனை மேற்கொண்ட பெங்களூரு உளவுத்துறை காவலர்கள், சித்திக் மற்றும் ஸ்ரீதர் ஆன்லைன் மூலமாக TDs தொகையில் பலரது கணக்கில் இருந்து கையாடல் செய்தது தெரியவந்தது. இதையடுத்து சேலம் வந்த பெங்களூரு உளவு பிரிவு காவலர்கள் சித்திக் மற்றும் ஸ்ரீதர் ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களது வீடு மற்றும் துணை அலுவலகங்களில் சோதனை நடத்தினர். ஆய்வின் போது, இருவரிடம் இருந்தும் லேப்டாப், மொபைல் ஃபோன்கள் மற்றும் பிற ஆவனங்களை கைபற்றி சென்றனர்.

மேலும், மத்திய அரசின் முகவர்களாக செயல்படும் இருவரும் சேலம் உள்ளிட்ட பகுதிகளிலும் TDsக்கான பரிந்துரையை செய்து வருகின்றனர். பெங்களூரு உளவு துறையினரின் விசாரணைக்கு பின்னரே, இந்த இருவரின் ஆன்லைன் மோசடிகள் எவ்வாறெல்லாம் நடந்துள்ளது. எத்தனை பேரிடம் இருந்து எத்தனை கோடிகள் மோசடி நடைபெற்றுள்ளது என்ற விபரம் தெரியவரும்.

அடுத்த செய்தி