ஆப்நகரம்

நாகர்கோவிலில் கல்லூரி மாணவர்களுக்கு போதை ஊசி மருந்துகள் விற்பனை செய்த இருவர் கைது!

கன்னியாகுமரி, நாகர்கோவில் பேருந்து நிலையம், ரயில்வே நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிகளவில் போதை ஊசி விற்பனை நடைபெற்று வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தது.

Samayam Tamil 9 Jul 2019, 5:52 pm
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், கல்லூரி மாணவர்களுக்கு போதை ஊசி மருந்துகள் விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
Samayam Tamil கல்லூரி மாணவர்களுக்கு போதை ஊசி மருந்துகள் விற்பனை செய்த இருவர் கைது!
கல்லூரி மாணவர்களுக்கு போதை ஊசி மருந்துகள் விற்பனை செய்த இருவர் கைது!


கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் பேருந்து நிலையம், முக்கடல் சங்கமம், கன்னியாகுமரி பீச், ரயில்வே நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சமீப காலமாக அதிகளவில் போதை ஊசி விற்பனை நடைபெற்று வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தது.

குறிப்பாக கல்லூரி மாணவர்களுக்கு சில குறிப்பிட்ட இடங்களில் விற்பனை செய்யபட்டு வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நாகர்கோவில் பேருந்து நிலையம் அருகே சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டு இருந்த இரு வாலிபர்களை நேசமணி நகர் போலீசார் பிடித்து விசாரணை செய்தனர்.

அவர்களை சோதனை செய்த போது கல்லூரி மாணவர்களுக்கு வழங்குவதற்காக போதை ஊசி மருந்துகள் வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில் இருவரும் நாகர்கோவில் அறுகுவிளையை சேர்ந்த சேகர் (45) வெட்டூர்ணிமடம் பகுதியை சேர்ந்த ஆரோன் ராஜ் (38) என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கன்னியகுமாரி, நாகர்கோவில் பேருந்து நிலையங்களிலும் போதை ஊசி விற்பனை களைகட்டி வருவதால் சம்பந்தபட்ட இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணிகளை தீவீரபடுத்தி உள்ளனர்.

அடுத்த செய்தி