ஆப்நகரம்

கார் ஓட்டியவருக்கு மாரடைப்பு- டூவிலர் மீது மோதியதில் இருவர் உயிரிழப்பு!

புதுக்கோட்டை நிஜாம் காலனியைச் சேர்ந்தவர் அடைக்கலவன். இவர் தனது சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் நத்தம் சென்று விட்டு புதுக்கோட்டைக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார்.

Samayam Tamil 12 Jul 2019, 6:59 pm
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள பொன்னனூரில் காரும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
Samayam Tamil sav


புதுக்கோட்டை நிஜாம் காலனியைச் சேர்ந்தவர் அடைக்கலவன். இவர் தனது சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் நத்தம் சென்று விட்டு புதுக்கோட்டைக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார். திருமயம் அருகே பொன்னனூர் என்ற இடத்தில் வந்தபோது அடைக்கலவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

இதில் கார் எதிர்பாராதவிதமாக எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதி பின்னர் புளிய மரத்தில் மோதி நின்றது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த மல்லாங்குடியைச் சேர்ந்த முத்துக்கருப்பன் என்பவரும், காரை ஓட்டி வந்த அடைக்கலவன் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து அப்பகுதி மக்கள் பனையப்பட்டி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து பொன்னமராவதி காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையில் வந்த போலீசார் விபத்தில் இறந்தவர்களின் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து பனையப்பட்டி குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி