ஆப்நகரம்

சற்றுமுன் பயங்கரம்: இந்தியன் ஆயில் குடோன் அருகே தீ விபத்து... 2 பேர் பலி 3 பேர் கவலைக்கிடம்...

மதுரை அருகே இயங்கி வரும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் குடோன் அருகே மற்றொரு ஆயில் குடோனில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் இரண்டு பேர் பலி.

Samayam Tamil 10 Feb 2020, 6:39 pm
மதுரை மாவட்டம் கப்பலூர் பகுதியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் குடோன் உள்ளது. இந்த நிலையில் இங்கு லாரியில் கொண்டுவரப்படும் பெட்ரோலை திருட்டுத்தனமாக இறக்கப்படும் பெட்ரோலை அங்கிருக்கும் வேறொரு குடோனில் பதுக்கி வைத்த வந்துள்ளனர்.
Samayam Tamil இந்தியன் ஆயில் குடோன் அருகில் தீ விபத்து  பேர் பலி


அதே போல இன்றும் தனியார் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லாரியிலிருந்து கொண்டு செல்லப்பட்ட பெட்ரோலை திருட்டுத்தனமாக வெளியே எடுத்து அந்த குடோனில் பதுக்கியுள்ளனர். இந்த நிலையில் அந்த குடோனில் திடீரென தீ பற்றி பயங்கர சத்ததுடன் வெடித்துள்ளது.


இதையடுத்து அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் பதறியடித்து தூரமாக சென்றனர். சம்பவம் அறிந்து விரைந்த திருமங்கலம் தீயணைப்புத் துறையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் குடோனில் இருந்த கரடிக்கல் பகுதியைச் சேர்ந்த கணேசன் மற்றும் விஜயக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மனைவி மீது சந்தேகம்... மகனுடன் சேர்ந்து ஏரியில் விழுந்த தந்தை... கரையோரம் கிடந்த உடல்கள்...

மேலும் கார்த்திக் ஆசைத்தம்பி, முக்கையா ஆகிய 3 பேர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆசைத்தம்பிக்குச் சொந்தமான இந்த குடோன் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அடுத்த செய்தி