ஆப்நகரம்

சென்னை பைனான்சியர் கொலை: கோர்ட்டில் இருவர் சரண்..!

அமைந்தகரை அருகே பைனான்சியர் கொல்லப்பட்ட சம்பவத்தில் இருவர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

Samayam Tamil 19 May 2022, 7:30 pm
சென்னை அமைந்தக்கரை பகுதியில் பைனான்சியர் ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு குற்றவாளிகள் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
Samayam Tamil chennai financier murder


சென்னை அமைந்தகரையில் பட்டப்பகலில் பைனான்சியர் ஆறுமுகம் என்பவரை இன்று மூன்று இருசக்கர வாகனத்தில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் கொடூரமாக வெட்டி கொலை செய்தது. தலைநகரில் அதுவும் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்திய நிலையில், சம்பவம் தொடர்பாக அமைந்தகரை போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், பைனான்சியர் ஆறுமுகத்தை கொலை செய்ததாக சந்திரசேகர் மற்றும் ரோஹித் ராஜ் ஆகிய இருவரும் கள்ளக்குறிச்சி குற்றவியல் விரைவு நீதிமன்ற நீதிபதி கண்ணன் முன்னிலையில் இன்று மாலையளவில் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

'சித்ராவை ஹேம்நாத்தே அனுப்பி வைப்பார்'... இதுவா கணவன் மனைவி உறவு ?

அதனை தொடர்ந்து கொலை வழக்கு குற்றவாளிகளான ரோஹித் ராஜ் மற்றும் சந்திரசேகர் ஆகிய இருவரையும் நீதிபதி கண்ணன் கடலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்த கொலை சம்பவத்தில் எஞ்சிய குற்றவாளிகளை போலீசார் தொடர்ந்து தேடி வரும் போலீசார் பைனான்சியர் கொலை செய்யப்பட்டது ஏன் என்பதை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி