ஆப்நகரம்

போலீஸ் தான் நம்புங்க; ரூ.50,000 கொடுங்க முடிச்சிடலாம்- சிக்கிய மோசடி பாய்ஸ்!

தன்னை போலீஸ் என்று அடையாளப்படுத்திக் கொண்டு, பணம் கேட்டு மிரட்டிய இருவரை உண்மையான போலீசார் வளைத்துப் பிடித்தனர்.

Samayam Tamil 7 Oct 2019, 1:56 pm
கடந்த வெள்ளிக்கிழமை அன்று, திருவள்ளூர் மண்டல போக்குவரத்து அதிகாரி ஜெய் பாஸ்கருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் தான் சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரகத்தில் இருந்து அதிகாரி பேசுவதாக ஒருவர் அறிமுகம் செய்து கொண்டார்.
Samayam Tamil Police


பின்னர், நீங்கள் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது என்று பாஸ்கரிடம் தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தை அப்படியே மூடி மறைக்க வேண்டுமென்றால் ரூ.50,000 பணம் தர வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

மனைவியை விட்டுக் கொடுக்க மறுத்ததால் கணவனைக் கொன்ற காதலன்.!

இதில் சந்தேகமடைந்த பாஸ்கர், உடனே திருவள்ளூர் மாவட்ட நகர காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் விசாரணையில் இறங்கினர். இந்த சூழலில் தொலைபேசியில் பேசிய நபர், தனது வங்கிக் கணக்கு விவரங்களை போக்குவரத்து அதிகாரி பாஸ்கருக்கு அளித்துள்ளார்.

”ராம்-ராம்” சொல்லாத பெண்ணிடம் அத்துமீறிய இளைஞர்கள் கைது

இதில் விரைவில் பணம் போட்டு விடுமாறும் கூறியுள்ளார். இந்நிலையில் வங்கிக் கணக்கு விவரங்களைக் கொண்டு, குற்றவாளி யார் என்பதை போலீசார் தேடினர். இதையடுத்து ஜனார்த்தனன்(31), அசோக் குமார்(29) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

ஓடும் ரயிலில் செல்போனை பாதுகாக்கச் சண்டையிட்டு, இளைஞர் பலி!

அவர்களிடம் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எனவே போலீஸ் என்று யாரேனும் கூறிக் கொண்டு வந்தால், அவர்களிடம் உரிய அடையாள அட்டை கேட்டு உறுதிபடுத்திக் கொள்வது நல்லது. அதேசமயம் கெடுபிடி போலீசாரிடம் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

அடுத்த செய்தி