ஆப்நகரம்

கோவை லாட்ஜில் பாலியல் தொழில்: அடைத்து வைக்கப்பட்ட பெண்ணை மீட்ட போலீஸ்!

கோவையில் பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Samayam Tamil 20 Aug 2020, 1:52 pm
கோவையில் ரகசிய அறையில் வைத்து பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபட்டுத்திய இருவரை மேட்டுப்பாளையம் போலீசார் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil forcing a woman into sex work


கோவை மேட்டுப்பாளையத்தை அடுத்த கல்லாறு பகுதியில் உள்ள விடுதி ஒன்றின் ரகசிய அறையில் பெண்ணை அடைத்து வைத்து பாலியல் தொழில் நடப்பதாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் பேரில், உரிய நடவடிக்கை எடுக்க மேட்டுப்பாளையம் போலீசுக்கு காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். அதன் பேரில் நேற்று மாலை ஊட்டி சாலையில் உள்ள சரண்யா லாட்ஜ் என்ற விடுதிக்கு போலீசார் சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

முகம் தெரியாத முகநூல் காதல், கை குழந்தையுடன் தவிக்கும் ஏழை பெண்...

அப்போது அங்குள்ள ரகசிய அறை ஒன்றில் வைத்து பாலியல் தொழில் நடப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த விடுதியை மாதம் ரூ.50 ஆயிரத்திற்கு கான்டிராக்ட் எடுத்து பாலியல் தொழில் செய்து வந்த ஆனைகட்டி பகுதியை சேர்ந்த மகேந்திரன் (46), மற்றும் கணேசன் (36) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

ஆன்லைன் வகுப்பு அவஸ்தை, 10ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை!

மேலும், விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பெங்களுரை சேர்ந்த 22 வயது பெண் மீட்கப்பட்டு காப்பகத்திற்கு அனுப்பப்பட்டார்.

அடுத்த செய்தி