ஆப்நகரம்

கோவை: மனைவியை அடித்த கணவன்; தடுக்க வந்த மச்சான்களுக்கு கத்தி குத்து..!

கோவையில் குடும்பத்தகராறில் பிரிந்து சென்ற மனைவியை அழைக்கச் சென்ற கணவன், சமாதானம் செய்ய வந்த மனைவியின் சகோதரர்களை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 14 Jul 2020, 11:11 pm
கோவை ஆலாந்துறை அடுத்த மூலப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் ஓட்டுநர் குமரேசன். இவருக்கும் வடிவேலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சங்கீதா என்ற பெண்ணுகும் திருமணமாகி பெண் குழந்தை ஒன்று உள்ளது.
Samayam Tamil accused


இந்நிலையில், குடிப்பழகத்திற்கு ஆளான குமரேசன் குடிபோதையில் அடிக்கடி தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் சங்கீதா கடந்த 10 நாட்களுக்கு முன்பு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் சம்பவத்தன்று குடிபோதையில் இருந்த குமரேசன் வடிவத்தில் இருக்கும் தனது மனைவியை அழைத்துவர சென்றுள்ளார்.

அப்போது சங்கீதா செல்ல மறுக்கவே, குமரேசன் தனது மனைவியை அடிக்க முற்பட்டுள்ளார். இதைப் பார்த்துக் கொண்டு அருகில் இருந்த சங்கீதாவின் சகோதரர்களான கருப்பசாமி மற்றும் அஜித் ஆகிய இருவரும் குமரேசனை தடுத்து சமாதனம் செய்ய முயற்சி செய்துள்ளனர்.

தாயைச் சித்திரவதை செய்த தந்தையை கொன்று, போலீசில் சரண்!

ஆனால், குடிபோதையில் இருந்த குமரேசன் சற்றும் எதிர்பாராத நேரத்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கருப்பசாமி மற்றும் அஜித் ஆகிய இருவரையும் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த கருப்பசாமி மற்றும் அஜித் ஆகிய இருவரையும் மீட்டு அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த ஆலந்துறை போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து குமரேசனை கைது செய்தனர். மேலும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கோவையில் பிரிந்து சென்ற மனைவியை சமாதானம் செய்து அழைத்து சென்ற கணவன் மனைவியின் சகோதரர்களை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி