ஆப்நகரம்

நாகை: சிறுமிக்கு தொல்லை கொடுத்த சிறுவர்கள் கைது..! நேரில் பார்த்த தாய்

நாகை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Samayam Tamil 8 Nov 2020, 5:45 pm
கடந்த மாதம் 26 ஆம் தேதி கோவை வேடப்பட்டியைச் சேர்ந்த இரண்டு சிறுமிகளை 14 மற்றும் 15 வயதாகும் இரண்டு சிறுவர்கள் விளையாட்டுக்காக அழைத்து சென்று பின்னர் பாலியல் பலாத்காரம் செய்தனர். அது தொடர்பான பாதிக்கப்பட்ட சிறுமிகள் வீட்டார் புகார் கொடுத்ததன் பேரில் சிறுவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தை ஆஜர் படுத்தி சிறார் பள்ளியில் அடைத்தனர்.
Samayam Tamil போக்சோ


இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நாகையில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. நாகை அருகே வீட்டில் படுத்துக்கொண்டிருந்த சிறுமியிடம் 13 மற்றும் 17 வயதுடைய சிறுவர்கள் பாலியல் ரீதியாக அணுகியுள்ளனர்.

அப்போது சிறுமியின் தாய் உள்ளே வர, மகளுக்கு பாலியல் தொல்லைகொடுத்து அருகில் படுத்துக்கொண்டிருந்த சிறுவர்களை பார்த்து சத்தமிட்டுள்ளார். உடனே அலறி அடித்துக்கொண்டு சிறுவர்கள் வெளியே ஓடினர். அதை தொடர்ந்து சிறுவர்கள் மீது நாகை மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்தனர்.

வேலூர் சாமியார்: அத கொடு, இத தரேன்..! மதி மயங்கிய பக்தர்கள்

அதன் பேரில், சிறுவர்களை வீடு புகுந்து கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறார் சிறையில் அடைத்தனர். சிறுமிகளுக்கு பெரும்பாலும் வயதானவர்களால் பாலியல் சீண்டல்கள் ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது சிறுவர்களும் இதுபோன்று செயல்களில் ஈடுபடும் அவலம் ஏற்பட்டுள்ளது. சிறுவர்களிடம் கையில் செல்போன் எப்போது வந்ததோ, அன்று முதல் வயதுக்கு மீறிய அனுபவத்தையும், செயல்களையும் அவர்கள் தேடி செல்வதாக சமுக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

அடுத்த செய்தி