ஆப்நகரம்

திருப்பூர் கொடுமை: தண்ணி இல்ல, ஆக்சிஜன் இல்ல, நல்லா இருந்த மனுஷன் போயிட்டாரு!

திருப்பூர் அருகே மின்தடை காரணமாக ஆக்சிஜன் நின்றதால் நோயாளிகள் அடுத்தடுத்து இறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 22 Sep 2020, 9:58 pm
திருப்பூர் அரசு மருத்துவமனையில் மின்தடை காரணமாக ஆக்சிஜன் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டதாகவும் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த 2 நபர்கள் அடுத்தடுத்து உயிரிழப்பு என உறவினர்கள் குற்றம் சாட்டினார். அதையடுத்து, உயிரிழந்தவர்கள் வேறு உடல் பாதிப்பால் இறந்ததாகவும், ஆக்சிஜன் காரணமல்ல எனவும் மருத்துவமனை முதல்வர் வள்ளி கூறினார்.
Samayam Tamil உறவினர் பேட்டி


தொடர்ந்து பேசிய மருத்துவமனை முதல்வர் வள்ளி, '' திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா மற்றும் பல்வேறு காரணங்களுக்காக நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சைகளுக்காக சிகிச்சை பெற்று வந்தவர்கள் இன்று மூன்று மணி நேரத்திற்கும் மேலாக ஏற்பட்ட மின்தடை காரணமாக ஆக்சிஜன் வழங்குவதில் தடை ஏற்பட்டதால் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் அவதியுற்றனர். இந்நிலையில், ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த 2 நபர்களும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். ஆனால் மின்தடை காரணமாக ஆக்சிஜன் செலுத்த முடியாததால் தான் உயிரிழந்திருப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மின்தடையால் அவர்கள் இறக்கவில்லை என்றும் வேறு உடல் பாதிப்பால் இறந்ததாகவும் மருத்துவமனை முதல்வர் வள்ளி இவ்வாறு கூறினார்.

சின்ன விசாரணைதான் வா... திருப்பூர் காவல் நிலையத்துக்கு சென்ற வாலிபர் மரணம்...

சம்பவத்தை அடுத்து மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அப்பகுதியில் மருத்துவ கல்லூரி கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் மின்கம்பி அறுந்து மின் தடை ஏற்பட்டதாகவும், உயிரிழந்தவர்களை குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

அடுத்த செய்தி