ஆப்நகரம்

இரவில் தாய், மகளுக்கு தொந்தரவு: தட்டி கேட்டதால் அறிவால் வெட்டு..! தேனி கொடுமை

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே நடந்த கோஷ்டி மோதலில் இரண்டு இளைஞர்களுக்கு அரிவாள் வெட்டு

Samayam Tamil 19 Apr 2021, 8:08 pm
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள இ. புதுக்கோட்டை கிராமத்தில் குடியிருந்து வருபவர் கருப்பசாமி. இவரது மனைவியும் மகளும் நேற்று இரவு வீட்டில் இருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் ராஜா என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் நின்றபடி வெளிச்சத்தை கருப்பசாமியின் வீட்டில் பாய்ச்சியுள்ளார்.
Samayam Tamil victim


அப்போது கருப்பசாமி மனைவியும் மகளும் லைட்டை அமர்த்துமாறு கூறியுள்ளதாக தெரிகிறது.. அப்போது கருப்பசாமி குடும்பத்தாருக்கும் ராஜா குடும்பத்தாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கோஷ்டி சண்டையாக மாறியது. இதில் இரண்டு தரப்பிலும் மாறி மாறி தாக்கிக் கொண்டதில் கருப்பசாமி தரப்பில் ஜெகநாதன் என்பவருக்கும். ராஜா தரப்பில் ராஜா மற்றும் மொக்கசாமி ஆகியோருக்கும் ரத்த காயம் ஏற்பட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் ஜெகநாதன் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இரு தரப்பில் நடந்த கோஷ்டி சண்டை சம்மந்தமாக பெரியகுளம் காவல்துறையினர் விசாரணை செய்து வரும் நிலையில் இன்று காலையில் கருப்பசாமி மற்றும் பிரபு ஆகியோர் அரிவாளால் பெரியசாமி மகன் தெய்வேந்திரன், மொக்கசாமி மகன் காமேஷ் ஆகியோரை நேருநகர் பகுதியில் வழிமறித்து அறிவாளால் வெட்டி தாக்கினர்.

சிறுமிக்கு வீடியோ கால், நள்ளிரவு சேட்டிங்... நடிகர் டேனி மீது பரபரப்பு புகார்..!

இதில் தெய்வேந்திரன் மற்றும் காமேஷ்க்கு தலை, கை ஆகிய பகுதியில் வெட்டு காயம் ஏற்பட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். அரிவாளால் வெட்டிய பிரபு, கருப்பசாமி மீது பெரியகுளம் வடகரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

அடுத்த செய்தி