ஆப்நகரம்

சீர்காழி: இருவர் கொலை - 16 கிலோ தங்க நகை கொள்ளை!

சீர்காழியில் நகை வியாபாரி வீட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டு தங்கமும் கொள்ளையடிக்கப்பட்டது.

Samayam Tamil 27 Jan 2021, 10:34 am
சீர்காழியில் நகை வியாபாரி வீட்டில் 2 பேரை கொன்று 16 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil sirkali


சீர்காழி ரயில்வே ரோட்டில் உள்ளது நகை வியாபாரி தன்ராஜின் வீடு. இங்கு மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து கொடூரமாக வியாபாரி குடும்பத்தை தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலில் நகை வியாபாரி தன்ராஜின் மனைவி ஆஷா( 45), மகன் அகில் (28) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தன்ராஜ் மற்றும் மருமகள் நிகில் ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.
சசிகலா இன்று விடுதலை: ஆர்ப்பரிக்கும் ஆதரவாளர்கள்!
சிசிடிவியின் ஹார்டுடிஸ்க் மற்றும் கார் உள்ளிட்டவற்றையும் கொலையாளிகள் ஐந்து பேர் எடுத்துச்சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொலையாளிகள் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.
சில்லுக்கருப்பட்டி பட இயக்குநரின் 'ஏலே' படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக சீர்காழி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தீரன் பட பாணியில் கொலை, கொள்ளையை அரங்கேற்றியதாக வட மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளையடித்த 15 கிலோ நகையுடன் கிராமம் ஒன்றில் பதுங்கியிருந்தவர்களை பொதுமக்களே சுற்றி வளைத்தனர்.

அடுத்த செய்தி