ஆப்நகரம்

3 வயது குழந்தையின் உயிரைக் குடித்த மாஞ்சா கயிறு- சென்னையில் சிக்கிய இருவர்!

மாஞ்சா நூல் பயன்படுத்தியதால் குழந்தை உயிரிழந்த விவகாரத்தில், சென்னையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Samayam Tamil 4 Nov 2019, 11:59 am
மிகவும் வலுபெற்ற மாஞ்சா நூல் ஆபத்தை விளைவிக்கக் கூடியவை. இதைக் கொண்டு பட்டம் விடுதல் உள்ளிட்ட விஷயங்களுக்கு போலீசார் தடை விதித்துள்ளனர். ஆனால் தடையை மீறி மாஞ்சா நூல் பயன்பாடு இருந்து வருகிறது.
Samayam Tamil Manja


இது பலரின் உயிரைக் குடிக்கும் அபாயகரமான சூழலும் ஏற்படுகிறது. தமிழகத்தில் மாஞ்சா நூல் பயன்பாட்டால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் உயிரிழந்துள்ளனர். அப்படியொரு சம்பவம் நேற்று மீண்டும் அரங்கேறியிருப்பது மிகவும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மாஞ்சா நூலுக்கு பலியான குழந்தை - சென்னையில் நடந்த பயங்கரம்!

அதுவும் 3 வயது குழந்தைக்கு என்ன தெரியும். மகிழ்ச்சியாக தனது தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த குழந்தையின் உயிர் மாஞ்சா நூலால் பறிபோகும் என்று யார் தான் எதிர்பார்த்திருப்பார்கள்.

சென்னை கொண்டித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் கோபாலின் 3 வயது மகன் அபிமன்யு. இவர் தனது மனைவி, மகனுடன் கொருக்குபேட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு நேற்று சென்றுள்ளார்.

மீனாம்பாள் நகர் மேம்பாலத்தில் சென்ற போது காற்றில் மாஞ்சா நூல் ஒன்று பறந்து வந்தது. அது மோட்டார் சைக்கிளின் முன்பகுதியில் இருந்த அபிமன்யு கழுத்தை வெட்டியது.

போலீஸ் பொண்டாட்டிக்கா இந்த நிலைமை? செமயா மாட்டிக் கிட்ட கணவர்!

ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த குழந்தையை, உடனே அருகிலிருந்த ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் ஏற்கனவே குழந்தை உயிரிழந்துவிட்டதாக அதிர்ச்சிகர தகவலை தெரிவித்தனர்.

இந்த நிகழ்வை ஏற்றுக் கொள்ள முடியாமல் பெற்றோர் வேதனையில் துடித்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை பகுதிகளில் மாஞ்சா நூல் காற்றாடி குறித்து போலீசார் சோதனை நடத்தினர்.

இதில் மாஞ்சா நூலில் பட்டம் விட்ட கொருக்குப்பேட்டை நாகராஜ், 15 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். மாஞ்சா நூல் பயன்பாடு குறித்து தகவல் தெரிந்தால், உடனே போலீசாரிடம் தெரிவித்து விடுங்கள்.

திருச்சி: ரூ. ஒரு கோடியே 40 லட்சம் கொள்ளை போன வழக்கு புது அப்டேட்!

அடுத்த செய்தி