ஆப்நகரம்

பள்ளிகள் திறப்பு: வகுப்பறையில் திருமணம் செய்துகொண்ட 2k கிட்ஸ்..!

ஆந்திராவில் பள்ளி வகுப்பறையிலேயே மைனர் காதலர்களுக்கு நடந்த திருமண வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 5 Dec 2020, 12:01 pm
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ராஜமுந்திரி ஜூனியர் கல்லூரி என்ற மேல்நிலை பள்ளியில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆந்திராவில் கொரோனா பரவலால் மூடப்பட்டிருந்த பள்ளிகள் தற்போது வழிகாட்டல் நெறிமுறைகளுடன் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மேற்கண்ட பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வரும் மாணவ, மாணவி இருவர் காதலித்து வந்துள்ளனர்.
Samayam Tamil andhra school marriage


கொரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டு இருந்ததால் இருவரால் சந்தித்துக்கொள்ள இயலவில்லை. இந்நிலையில், பள்ளி மீண்டும் திறக்கப்பட்டுள்ளதையடுத்து நீண்ட நாட்கள் கழித்து சந்தித்திக்கொண்ட காதலர்கள் பள்ளி வகுப்பறையில் ஆள் இல்லாத நேரத்தில் தாலி கட்டிக்கொண்டனர்.


மாமனார் வீட்டில் சொகுசு வாழ்க்கை, ஆசை தீர விளையாட்டு, இளம்பெண் ஏமாற்றம்

அதனை செல்போனில் வீடியோவாக பதிவு செய்யும் மற்றொரு மாணவன், '' சீக்கிரம், யாராவது வந்து விட போகிறார்கள்'' என்று தெலுங்கில் பேசுவதும் இடம்பிடித்துள்ளது. பின்னர் அந்த வீடியோவை சமூக வலைத்தளத்திலும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். அந்த வீடியோ தீயாக பரவ, விஷயம் பள்ளி முதல்வருக்கு சென்றுள்ளது.

ரஜினிகாந்தின் கட்சி பெயர், கொடி என்ன தெரியுமா? வெளியான முக்கிய தகவல்!

இதையடுத்து தாலிகட்டிக்கொண்ட இருவர் மற்றும் வீடியோ எடுத்த மாணவன் ஆகிய மூவரையும் பள்ளி நிர்வாகம் டிசி கொடுத்து வெளியே அனுப்பியுள்ளது. இதற்கிடையில் மாணவியின் பெற்றோர் தாலி கட்டிய மாணவனை குறித்து உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. வீடியோவில் உள்ள இருவரும் மைனர் என்பதால் அவர்களது திருமணம் ரத்து செய்யப்பட்டாலும், பள்ளி வகுப்பறையில் நடந்துள்ள இந்த சம்பவம் பெற்றோருக்கும், பள்ளி நிர்வாகத்துக்கும் பெரிய தலை குனிவை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி