ஆப்நகரம்

நிர்வாணமாக பெண்களின் உடல்கள்... இடுப்பு கீழ் துண்டான பாகம்... ஒரே பாணியில் இரு கொலை

கர்நாடக கிராமம் அருகே பெண்களை கொன்று உடல்களை இரு துண்டாக வெட்டிய கொடூர சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Samayam Tamil 9 Jun 2022, 2:55 pm
கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் பாண்டவபுரா தாலுகா பேபி கிராமத்தில் ஒரு ஏரி உள்ளது. அதன் அருகே ஒரு கால்வாயும் ஓடுகிறது. அந்த கால்வாயில் நேற்று காலையில் 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் உடல் நிர்வாண நிலையில் மிதந்து வந்தது. அந்த பெண்ணின் உடல் பாதியளவு மட்டுமே இருந்தது. இடுப்புக்கு கீழ் பகுதி வெட்டப்பட்டு இருந்தது. அந்த மீதி பாதி உடல் எங்கே என்று தெரியவில்லை.
Samayam Tamil karnataka murder


இதேபோல் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா அரகெரே கிராமத்தைச் சேர்ந்த சிக்க தேவராஜா என்ற விவசாயிக்கு சொந்தமான நிலத்தில் பண்ணைக் குட்டை உள்ளது. அந்த பண்ணைக் குட்டையில் மீன் பிடிப்பதற்காக அக்கிராமத்தைச் சேர்ந்த ஒரு வாலிபர் தூண்டில் வீசினார்.

அப்போது தூண்டிலில் சிக்கி மற்றொரு பெண்ணின் உடல் நிர்வாண நிலையில் வந்தது. அந்த உடலும் பாதியளவு மட்டுமே இருந்தது. இடுப்புக்கு கீழ் துண்டிக்கப்பட்டு இருந்தது. இதனால் பதற்றம் அடைந்த அந்த 2 கிராம மக்களும் இதுபற்றி மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.

அவர்கள் மூலம் பாண்டவபுரா மற்றும் அரகெரே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் 2 போலீஸ் நிலைய அதிகாரிகளும், போலீசாரும் சம்பவ இடங்களுக்கு சென்று பெண்களின் பாதியளவு உடல்களை கைப்பற்றினர். இதில் 2-வதாக மீட்கப்பட்ட பெண்ணுக்கு 40 முதல் 45 வயது வரை இருக்கும் என்று தெரிகிறது. 2 பெண்களும் ஒரே மாதிரி கொலை செய்யப்பட்டு உடல்கள் 2 துண்டுகளாக வெட்டப்பட்டு இருப்பதும், பாதியளவு உடல்களை ஏரி மற்றும் பண்ணை குட்டையில் வீசியிருப்பதும் தெரியவந்தது.

வேறு சாதி வாலிபனை காதலித்த மகள்... கொன்று வீசிய தாய், தந்தை... அதிர்ச்சி க்ரைம் சீன்

யார் இவர்கள்? இப்படி கால்களை கட்டி உடலை இரு துண்டுகளாக வெட்டி இடுப்பு பகுதியை மட்டும் ஏன் வீச வேண்டும் உள்ளிட்ட சந்தேகங்கள் எழுகின்றன.. மேலும், கொலை செய்யப்பட்டுள்ள இரு பெண்களின் தலை பகுதி எங்கே வீசப்பட்டிருக்கும் என்றும் போலீசார் தேடி வருகின்றனர்.

அடுத்த செய்தி