கணவர்களால் கொடூரக் கொலை செய்யப்பட்ட மனைவிகள்..!
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் நடைபெற்ற இருவேறு சம்பவங்களில் கட்டிய கணவர்களே, தங்களுடைய மனைவியை கொடூரக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil 14 Jul 2019, 9:36 pm
முன்னதாக, திருநெல்வேலியில் மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மஹாராஜன் (37), தன்னுடைய மனைவி செல்வி (35) மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வந்தார். அப்போது, கடந்த 14ம் தேதி தம்பதிகள் இருவருக்குமிடையில் சண்டை ஏற்பட்டுள்ளது.
இதில் செல்வியை அரிவாளால் வெட்டியுள்ளார் மஹாராஜன். அப்போது கதறி அழுத செல்வியின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு உடனே மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் உடனே மஹாராஜனை கைது செய்தனர். அவர் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
தூத்துக்குடியைச் சேர்ந்த பாக்யமுத்து (57), அவருடைய மனைவி அன்னி பெசண்ட் (55) உடன் கடும் வாக்குவாதத்தில் ஏற்படுள்ளது. அப்போது கட்டையால் அன்னி பெசண்டை அடித்து கொன்றுள்ளார் பாக்யமுத்து.
கொல்லப்பட்ட அன்னி பெசண்ட்டின் உடல் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, உடற்கூறு ஆய்வுக்கு ஒப்படைக்கப்பட்டது. இதற்கிடையில் இந்த கொலை தாளமுத்து நகர் போலீசார் பதிவு செய்தனர். பிறகு பாக்யமுத்துவை சிறையில் அடைத்தனர்.
இதில் செல்வியை அரிவாளால் வெட்டியுள்ளார் மஹாராஜன். அப்போது கதறி அழுத செல்வியின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு உடனே மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் உடனே மஹாராஜனை கைது செய்தனர். அவர் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
தூத்துக்குடியைச் சேர்ந்த பாக்யமுத்து (57), அவருடைய மனைவி அன்னி பெசண்ட் (55) உடன் கடும் வாக்குவாதத்தில் ஏற்படுள்ளது. அப்போது கட்டையால் அன்னி பெசண்டை அடித்து கொன்றுள்ளார் பாக்யமுத்து.
கொல்லப்பட்ட அன்னி பெசண்ட்டின் உடல் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, உடற்கூறு ஆய்வுக்கு ஒப்படைக்கப்பட்டது. இதற்கிடையில் இந்த கொலை தாளமுத்து நகர் போலீசார் பதிவு செய்தனர். பிறகு பாக்யமுத்துவை சிறையில் அடைத்தனர்.