ஆப்நகரம்

நம்பியே வந்த காதலி, நண்பனுடன் சேர்ந்து வாலிபர் செய்த கொடுமை..!

திண்டுக்கல் அருகே வீட்டைவிட்டு ஓடிய பெண் 5 நாட்கள் கழித்து சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது.

Samayam Tamil 10 Jan 2021, 4:31 pm
கொரோனா காலகட்டத்தில் கொலை,கொள்ளை, பலாத்காரம் சம்பவங்கள் அதிகமாக அரங்கேறி வருகின்றன. கொரோனா வைரஸ் பாதிப்புகள் தொடர்பான செய்திகள் வந்துகொண்டிருக்கும் வேளையில், கொடூரமான முறையில் எளிதாக அரங்கேறும் கொலை சம்பவங்கள் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
Samayam Tamil jeyasri


திண்டுக்கல் மாவட்டம் தென்னம்பட்டியைச் சேர்ந்தவர் கதிர்வேல். இவரது மக்கள் ஜெயஸ்ரீ. இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நுற்பாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 1 ஆம் தேதி வேலைக்கு சென்ற ஜெயஸ்ரீ மாலை வீடு திரும்பவில்லை. இதனால் மகளை காணவில்லை எனக்கூறி கதிர்வேல் வாகரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் இளம்பெண்ணை தேடி வந்தனர்.

இந்நிலையில், கடந்த 5 ஆம் தேதி ஜெயஸ்ரீயின் உடல் வாகரை ஆடை தொழிற்சாலை அருகே கண்டெடுக்கப்பட்டது. அதனையடுத்து ஜெயஸ்ரீயின் உடலை பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். அப்போது, ஜெயஸ்ரீயின் செல்போனை ஆய்வு செய்ததில், அதில் ஒரே எண்ணுக்கு ஜெயஸ்ரீ பலமுறை கால் செய்துள்ளார்.

பெரம்பலூர் சோகம், அலட்சியத்தால் கர்ப்பிணி பலி, குழந்தை அழுகியது

அந்த எண்ணை வைத்து விசாரித்ததில், அது ஜெயஸ்ரீயுடன் வேலை பார்த்து வந்த தங்கதுரை என்பவரது எண் என தெரிய வந்தது. அவரை பிடித்து விசாரித்ததில், தங்கதுரையை காதலித்து வந்த ஜெயஸ்ரீ தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு தொடர்ந்து வற்புத்தி வந்துள்ளார். இதற்கிடையில், காதல் விவகாரம் ஜெயஸ்ரீயின் பெற்றோருக்கு தெரிய வரவே, அவரை வீட்டில் கண்டித்துள்ளனர்.

இதனால், ஜெயஸ்ரீ கடந்த 1 ஆம் தேதி அன்று வீட்டை விட்டு ஓடிவந்து தங்கதுரையிடம் அடைக்கலம் கேட்டுள்ளார். அப்போது தங்கத்துறையுடன் அவரது நண்பர் ஜெகநாதனும் இருந்துள்ளார். சம்பவ, நடந்த அன்று திருமணம் செய்துகொள்ளுமாறு ஜெயஸ்ரீ தங்கதுரையிடம் வற்புறுத்தியுள்ளார். அப்போது இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதனால் ஆத்திரமடைந்த தங்கதுரை, நண்பனுடன் சேர்ந்து ஜெயஸ்ரீயை அடித்து கொலை செய்துள்ளார். இதையடுத்து, போலீசார் தங்கதுரையையும், ஜெகநாதனையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அடுத்த செய்தி