ஆப்நகரம்

மூதாட்டியின் நகையை பறித்த இளைஞர்கள்; பாவமாக அழும் சோகமான நிலைமை

நாமக்கல் அருகே சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் பல்சர் பைக்கில் வந்த 2 இளைஞர்கள் 6 சவரன் நகை பறித்து கைவரிசை

Samayam Tamil 12 May 2022, 7:08 pm
நாமக்கல் நகராட்சிக்கு உட்பட போதுப்பட்டியை சேர்ந்த மூதாட்டி வரதம்மாள் (77). இவர் தனது தோட்டத்தில் விளையும் காய்கறிகளை ஏ.எஸ்.பேட்டை பகுதியில் வீடு வீடாக சென்று விற்பனை செய்வது வழக்கம்.
Samayam Tamil chanin snatch


இந்நிலையில், இன்று ஏ.எஸ் பேட்டை பகுதிக்குட்பட்ட கே.கே.பி. நகரில் மூதாட்டி வரதம்மாள் சென்று கொண்டிருந்த போது அவரை பின்தொடர்ந்து பல்சர் பைக்கில் வந்த 2 இளைஞர்கள் மூதாட்டி அணிந்திருந்த 6 சவரன் தங்க நகைகளை பறித்து கொண்டு அங்கிருந்து வேகமாக தப்பி சென்றனர்.

இதுகுறித்து மூதாட்டி வரதம்மாள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த நாமக்கல் போலீசார் பல்சர் பைக்கில் வந்த 2 இளைஞர்களை தேடி வருகின்றனர். மேலும், சம்பவ இடத்திற்கு வந்த நாமக்கல் டி.எஸ்.பி சுரேஷ் சம்பவ குறித்து தீவிர விசாரணை செய்து வருகிறார்.

பத்தல பத்தல பாடல்: நடிகர் கமல் மீது பரபரப்பு புகார்..! கிளம்பியது சர்ச்சை

கடந்த ஒரு வாரத்தில் நாமக்கல் சுற்று வட்டார பகுதிகளில் ஏ.டி.எம் கொள்ளை, நகை அடகு கடை கொள்ளை, டவுசர் கொள்ளையர்கள், செயின் பறிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த செய்தி