ஆப்நகரம்

திருவாரூர்: ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மர்ம நபர்கள் கொண்டாடிய ‘போகி’!

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு பல்வேறு ஊராட்சிகளில் வன்முறைச் சம்பவங்களும் நடைபெற்றுவருகின்றன.

Samayam Tamil 15 Dec 2019, 10:32 am
2016ஆம் ஆண்டு நடைபெற்றிருக்க வேண்டிய உள்ளாட்சி தேர்தல் மூன்று ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த நிலையில், வரும் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுகிறது.
Samayam Tamil ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மர்ம நபர்கள் கொண்டாடிய போகி


அதுவும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டுமே தற்போது தேர்தல் நடைபெறுகிறது. பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகிய பகுதிகளுக்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை கடைசி நாள்; மும்முரமாக வேலை செய்யும் தமிழக அரசியல் கட்சிகள்!

இந்தத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் என்பதால் கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. அதே சமயம் உள்ளாட்சி மன்றத் தலைவர் பதவி பல இடங்களில் ஏலம் விடப்படும் சம்பவங்களும் நடைபெறுகிறது. விருதுநகர் அருகே தலைவர் பதவி ஏலம் விடப்படுவதை தட்டிக்கேட்ட வங்கி மேலாளர் சதீஷ் குமார் கொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் இன்று அதிகாலை திருவாரூர் அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்தின் பூட்டை உடைத்து வேட்புமனுக்கள் தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.

மழை எங்கெல்லாம் வெளுத்து வாங்கியிருக்கு தெரியுமா?

வடகண்டம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த வேட்புமனுக்களை மட்டும் எடுத்து தீயிட்டுக் கொளுத்தினர். வேட்பு மனுத்தாக்கல் நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில் சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் கொளுத்தப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை அறிந்து கிராம நிர்வாக அலுவலர்கள், வட்டாட்சியர் வந்து பார்த்த்தனர்.

குடவாசல் காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

அடுத்த செய்தி