ஆப்நகரம்

கோவில் பூசாரி வெட்டி கொலை: மர்ம நபர்களை தேடும் போலீசார்!

திண்டுக்கல் அருகே கோவில் பூசாரியை வெட்டி கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Samayam Tamil 16 Apr 2019, 3:40 pm
திண்டுக்கல் அருகே கோவில் பூசாரியை வெட்டி கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Samayam Tamil mu


திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே உள்ள காக்கையன்குளத்துப்பட்டியைச் சேர்ந்த மூட்டை தூக்கும் கூலித் தொழிலாளி முத்துச்சாமி. இவருக்கு வசந்தா மற்றும் நாச்சி என்ற இரு மனைவிகளும், ஒன்பது பிள்ளைகளும் உள்ளனர். தற்போது வடமதுரை திருச்சி சாலையில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வரும் முத்துச்சாமி, அதிரடி கருப்பணசாமி கோவிலில் பூசாரியாக உள்ளார்.

இந்நிலையில் இன்று காலை வடமதுரை பேரூராட்சிக்கு உட்பட்ட மந்தைகுளம் பகுதியில் முத்துச்சாமி சடலமாக கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த வடமதுரை போலீசார், சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சொத்து பிரச்னைக்காக கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மர்ம நபர்கள் பூசாரியை வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி