ஆப்நகரம்

பெண் எஸ்ஐகளுக்கு பாலியல் தொந்தரவு..! பரபரப்பான புகாரில் விசாரணை அறிக்கை

ஈரோடு எஸ்பி அலுவலககத்தில் பெண் உதவி ஆய்வாளர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததான புகாரில் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 18 Oct 2020, 9:45 pm
ஈரோடு மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றி வரும் பெண் உதவி ஆய்வாளர்களுக்கு உயர் அதிகாரி ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக காவல் கண்காணிப்பாளர் தங்கதுரையிடம் பாதிக்கப்பட்ட பெண் எஸ்ஐ புகார் அளித்தார்.
Samayam Tamil file pic


அதன்பேரில், குற்றம் சாட்டப்பட்டுள்ள உயர் அதிகாரி, தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றும் பெண் உதவி ஆய்வாளர்கள், புகார் கொடுத்த உதவி ஆய்வாளர் ஆகியோரிடம் விசாரணை நடத்த கூடுதல் காவல் ஆணையர் கனகேஸ்வரிக்கு மாவட்ட எஸ்.பி. தங்கதுரை உத்தரவிட்டார்.

மேலும், விசாரணையை விரைவில் முடித்து தொழில்நுட்ப பிரிவு காவல்துறை இயக்குனரிடம் அறிக்கையை சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. அந்த குழுவில் தன்னார்வலர் ஒருவர், பெண் உதவி ஆய்வாளர் உட்பட 4 பேர் அமைந்தனர்.

மதுரை எஞ்சினியர் மர்ம கொலை..! சாக்குப்பையில் கிடந்த சடலம்...

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஈரோடு மாவட்ட எஸ்பி தங்கதுரை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தொழில்நுட்ப பிரிவில் பெண் காவல் ஆய்வாளர்கள் அளித்த புகாரை விசாரிக்க கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

தொடர்ந்து, விசாரணை நடத்தப்பட்டு தொழில்நுட்ப பிரிவு காவல்துறை இயக்குனர் அலுவலகத்துக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பாலியல் புகாரில் சம்மந்தப்பட்ட அதிகாரி மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி