ஆப்நகரம்

10 ஆயிரம் ஆபாச படங்கள்..! வாட்ஸப்பில் குழு, திருச்சி வாலிபரின் பின்னணி.. அடுத்த குறி சென்னைக்கு..!

குழந்தைகளின் ஆபாசப் படங்களை பார்த்து பகிர்ந்து வந்த குற்றத்தில் திருச்சி வாலிபர் அல்போன்ஸ்ராஜ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் சிக்கியது எப்படி என்பதை குறித்து பாப்போம்...

Samayam Tamil 12 Dec 2019, 5:05 pm
திருச்சியில் பாலக்கரை காஜாபேட்டை புதுத் தெருவை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் அல்போன்ஸ்ராஜ் (42). ஐடிஐ முடித்து விட்டு ஏசி மெக்கானிக்காக பணியாற்றிய வந்த கிறிஸ்டோபருக்கு இளமை பருவத்தில் இருந்தே ஆபாசப் படங்கள் பார்ப்பதில் ஆர்வம் அதிகம் என்று தெரிகிறது.
Samayam Tamil 10 ஆயிரம் ஆபாச படங்கள்..! வாட்ஸப்பில் குழு, திருச்சி வாலிபரின் பின்னணி.. அடுத்த குறி சென்னைக்கு..!


குறிப்பாக, குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை மட்டும் விரும்பி பார்த்து வந்துள்ளார். இவருக்கு கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு பிறகும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஆபாச படங்களை தேடி தேடி பார்த்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாகர்கோவிலில் தனியாக தங்கி வேலை பார்த்து வந்த இவர் அதன் பிறகு சரியாக வேலைக்கு செல்லாமல் முகநூலில் வெவ்வேறு பெயர்களில் கணக்குகளை தொடக்கி அவற்றில் ஆபாச படங்களை பகிர்ந்து வந்துள்ளார்.

பேஸ்புக், மெசஞ்சர் மூலம் குழு துவங்கி, நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு ஆபாசப் படங்களை அனுப்பி வைப்பது கிறிஸ்டோபரின் வாடிக்கையாக இருந்துள்ளது. மேலும், வாட்ஸ் அப்பில் குழு ஆரம்பித்து அதிலும் ஆபாசப் படங்களை பகிர்ந்துள்ளார்.

சென்னையில் எஞ்சினியரிங் மாணவர் தற்கொலை..! ராகிங் விவகாரம் என போலீசார் சந்தேகம்...

இவரை கைது செய்துள்ள கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார், கிறிஸ்டோபர் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் 67ஏ, 67பி, போக்சோ 13, 14, 15 ஆகிய ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதையடுத்து, அவரது மொபைல் போனை பறிமுதல் செய்த போலீசார், அதில் இருந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆபாசப் படங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து திருச்சி மகளிர் நீதிமன்ற நீதிபதி வனிதா முன்னிலையில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை, 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.

'நான் கெட்ட பொண்ணு, உங்களை கொள்ள போறேன்'.. கடிதம் எழுதிவிட்டு தந்தையை கொலை செய்த மகள்..

குழந்தைகள் ஆபாச படங்களை பகிர்ந்து வந்த வெவ்வேறு குழுக்களில் இருந்து 100க்கும் மேற்பட்டவர்களின் பெயர் பட்டியலை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பட்டியலில், சென்னையைச் சேர்ந்தவர்கள் முதலிடம் வகிக்கின்றனர். கிறிஸ்டோபர் கைதாகியுள்ளதை அடுத்து சென்னைவாசிகள் மீது நடவடிக்கை பாயும் என காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி