ஆப்நகரம்

''என் மேல கேஸ்'', அது ஒரு பிரச்சனையே இல்லை..! .வனிதா VS கஸ்தூரி...

வனிதா விஜயகுமார் விவகாரத்தில் நடிகை கஸ்தூரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 23 Jul 2020, 2:26 pm
நடிகர் விஜயகுமார் மகளான வனிதாவுக்கும், பீட்டர் பால் என்பவருக்கும் கடந்த 27 ஆம் தேதி திருமணம் நடந்தது. கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்ற இந்த திருமணத்தில் முத்த பரிமாற்றங்கள் முதல், விவாகரத்தே செய்யாமல் விவாகரத்தான பெண்ணுக்கு தாலி கட்டிய பீட்டர் பாலின் விவகாரம் வரை சர்ச்சைக்கு மேல் சர்ச்சையாகி வருகிறது.
Samayam Tamil kasthuri shankar


முன்னதாக பீட்டர் பால் முறைப்படி திருமணம் செய்துகொண்ட முதல் மனைவியான எலிசபெத் போலீசில் புகார் கொடுத்தார். எலிசபெத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என சமூக ஊடகங்களில் பலரும் ஆதரவு அளித்து வருகின்றனர். அதில், குறிப்பாக சூர்யா தேவி என்பவர் தொடர்ச்சியாக வனிதாவை விமர்சித்து வீடியோ வெளியிட்டு வருகிறார்.


பதிலுக்கு வனிதாவும் பீப் சத்தம் போடும் அளவிற்கு பேசி வருகிறார். இந்நிலையில், சூர்யா தேவி மீது வனிதா ஏற்கெனவே, போரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், போலீசார் இருவரையும் அழைத்து சமாதானம் செய்து அனுப்பினர். இருப்பினும் இருவரும் தொடர்ச்சியாக வீடியோ வெளியிட்டு சண்டையிட்டு கொண்டனர். இந்நிலையில், சூர்யா தேவியை நேற்று போலீசார் கைது செய்துள்ள நிலையில், நடிகை கஸ்தூரி மீதும் வழக்கு போடப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

வேலைக்காரர் மனைவி மீது நீண்ட நாள் ஆசை..! கோவையில் பரபரப்பு...

அதனை தெரிந்துகொண்ட நடிகை கஸ்தூரி, '' என் மீதுள்ள கேஸ் காமெடிகளை நான் பார்த்துக்கொள்கிறேன். முதலில் சூர்யா தேவியை காப்பாற்ற வேண்டும். அதன் பிறகு உங்களை சந்திக்கிறேன்'' என கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.

அடுத்த செய்தி