ஆப்நகரம்

தமிழகத்தில் செய்தியாளர் மீது கொலை வெறித்தாக்குதல்..! கள்ளக்குறிச்சியில் பரபரப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டையில் வெளிச்சம் தொலைக்காட்சியின் செய்தியாளர் மீது கொலை வெறிதாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 24 Apr 2020, 1:40 pm
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செம்மணங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதி.சுரேஷ். இவர் உளுந்தூர்பேட்டை பகுதி வெளிச்சம் தொலைக்காட்சி செய்தியாளராக பணியாற்றி வருகிறார்.
Samayam Tamil வெளிச்சம் செய்தியாளர் மீது கொலை வெறித்தாக்குதல்


இந்தநிலையில் உளுந்தண்டார்கோவில் பகுதியில் உள்ள பள்ளி சுற்றுச்சுவரில் வரையப்பட்டிருந்த அம்பேத்கரின் படத்தை சிலர் அவமதித்ததாக வெளிச்சம் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. இதனால் கோபம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த சிலர் செய்தியாளர் சுரேஷை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர்.

விஜய் ரசிகரை கொலை செய்த ரஜினி ரசிகர்!

இந்நிலையில், சுரேஷ் பணி முடிந்து உளுந்தூர்பேட்டையில் இருந்து செம்மநங்கூர் நோக்கி இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அவரை வழி மறித்த ஒரு கும்பல் அரிவாள், இரும்பு கம்பி போன்ற பயங்கர ஆயுதங்களை கொண்டு சுரேஷை சரமாரியாக தாக்கினர்.

இதில் ஆதி சுரேஷ் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் சுருண்டு விழுந்தார். இதையடுத்து தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி கோரிக்கைகள் எழுந்துள்ளன.

அடுத்த செய்தி